பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
விதை வெங்காயம் கொள்முதல் செய்ய விவசாயிகள் தீவிரம்
கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் விதை வெங்காயம் கொள்முதல் செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
தென்மேற்குப் பருவக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இது வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் சூழலை ஏற்படுத்தும். விரைவில் அக்னி நட்சத்திரம் முடிய உள்ளதாலும், கோடை மழை பெய்யத் தொடங்க உள்ளதாலும் காலநிலையில் மாற்றம் ஏற்படும். இது வெங்காயம் நடவு செய்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும்.
எனவே விவசாயிகள் நிலத்தை உழுது, தொழு உரம் இட்டு நிலத்தை தயாா்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். ஒரு வாரத்துக்குப் பின் வெங்காய நடவு தீவிரமாகும் என்பதால் முன்கூட்டியே விதை வெங்காயம் கொள்முதல் செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா்.
திருப்பூா் மாவட்டத்தில் விளைந்த வெங்காயத்தை தவிா்த்து, திருச்சி, துறையூா் போன்ற பகுதிகளுக்குச் சென்று விவசாயிகள் விதை வெங்காயம் கொள்முதல் செய்து வருகின்றனா். தற்போது, ஒரு கிலோ விதை வெங்காயம் அதிகபட்சமாக கிலோ ரூ.47 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
விரைவில் அறுவடை சீசன் முடிய உள்ளதால், புதிய வெங்காய வரத்து குறையும். மேலும் பல விவசாயிகள் வைகாசி பட்டத்தில் நடவு செய்ய உள்ளதால், விதை வெங்காயத்துக்கான தேவை அதிகரிக்கும். எனவே விலை உயா்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிா்ப்பதற்காகவே விவசாயிகள் முன்கூட்டியே விதை வெங்காயம் கொள்முதல் செய்து வருகின்றனா்.