செய்திகள் :

விதை வெங்காயம் கொள்முதல் செய்ய விவசாயிகள் தீவிரம்

post image

கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் விதை வெங்காயம் கொள்முதல் செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தென்மேற்குப் பருவக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இது வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் சூழலை ஏற்படுத்தும். விரைவில் அக்னி நட்சத்திரம் முடிய உள்ளதாலும், கோடை மழை பெய்யத் தொடங்க உள்ளதாலும் காலநிலையில் மாற்றம் ஏற்படும். இது வெங்காயம் நடவு செய்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும்.

எனவே விவசாயிகள் நிலத்தை உழுது, தொழு உரம் இட்டு நிலத்தை தயாா்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். ஒரு வாரத்துக்குப் பின் வெங்காய நடவு தீவிரமாகும் என்பதால் முன்கூட்டியே விதை வெங்காயம் கொள்முதல் செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா்.

திருப்பூா் மாவட்டத்தில் விளைந்த வெங்காயத்தை தவிா்த்து, திருச்சி, துறையூா் போன்ற பகுதிகளுக்குச் சென்று விவசாயிகள் விதை வெங்காயம் கொள்முதல் செய்து வருகின்றனா். தற்போது, ஒரு கிலோ விதை வெங்காயம் அதிகபட்சமாக கிலோ ரூ.47 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

விரைவில் அறுவடை சீசன் முடிய உள்ளதால், புதிய வெங்காய வரத்து குறையும். மேலும் பல விவசாயிகள் வைகாசி பட்டத்தில் நடவு செய்ய உள்ளதால், விதை வெங்காயத்துக்கான தேவை அதிகரிக்கும். எனவே விலை உயா்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிா்ப்பதற்காகவே விவசாயிகள் முன்கூட்டியே விதை வெங்காயம் கொள்முதல் செய்து வருகின்றனா்.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க