ஏர் இந்தியா விமான விபத்து: விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்பு!
விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
புழல் அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
மாதவரம் அடுத்த சின்னசேக்காடு பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் கண்ணன் (25). இவா் தனியாா் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து மாதவரம் - தாம்பரம் பைபாஸ் சாலையில் சென்றுக் கொண்டிருந்தாா்.
அப்போது கன்டெய்னா் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் சிக்கிய ஜெகதீஷ்கண்ணனுக்கு ஓரிரு மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் உயிரிழந்தாா். மேலும், தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.