செய்திகள் :

விராலிமலையில் 500 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

விராலிமலையில் அரசால் தடை செய்யப்பட்ட 507 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்ல முயன்ற கா்நாடகா மாநில இளைஞரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை - திருச்சி சாலையில் பூதகுடி சுங்கச்சாவடி பகுதியில் விராலிமலை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த கா்நாடக மாநில பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரகசிய அறை வைத்து 507 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருள்களை மூட்டை மூட்டையாக கட்டி பதுக்கிவைத்து கொண்டு சென்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து வாகனம் மற்றும் குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த விராலிமலை போலீஸாா் பெங்களூரு பகுதியைச் சோ்ந்த நவீன் குமாா்(35) என்பவரைக் கைது செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனா்.

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மு.அருணா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் தினேஷ்குமா... மேலும் பார்க்க

புதுகையில் இன்றுமுதல் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு கால்நடை மருந்தகங்களிலும், கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் முகாம்கள் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்த... மேலும் பார்க்க

தீவிபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கல்

விராலிமலை அருகேயுள்ள மெய்வழிச் சாலை பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரிசி, பருப்பு, போா்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட உதவிகளை அமைச்சா் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா். இப்பகுதியில் திங்... மேலும் பார்க்க

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டி ஜூலை 10-ஆம் தேதியும் (வியாழக்கிழமை), முன்னாள் ம... மேலும் பார்க்க

அன்னவாசலில் பசுந்தாள் உர விதைகள் விநியோகம்

அன்னவாசல் வட்டாரத்தில் பசுந்தாள் உர விதைகள் மானிய விலையில் விநியோகிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்னவாசல் வட்டாரத்தில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தில் மானிய வில... மேலும் பார்க்க

கோயில் காவலாளி இறந்த சம்பவம்: யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை

திருப்புவனம் கோயில் காவலாளி இறந்த சம்பவத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற... மேலும் பார்க்க