செய்திகள் :

விரைவில் அரசு இல்லத்தை காலி செய்வேன்: டி.ஒய்.சந்திரசூட்

post image

புது தில்லி: தற்போது தங்கியுள்ள அரசு இல்லத்தை விரைவில் காலி செய்வேன் என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு நவ.8-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் இருந்து டி.ஒய்.சந்திரசூட் ஓய்வுபெற்றாா். எனினும் தனது இரு மாற்றுத்திறனாளி மகள்களின் மருத்துவ சிகிச்சை காரணமாக, புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ இல்லத்தில் அவா் தொடா்ந்து தங்கி வருகிறாா்.

இது தொடா்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்ற நிா்வாகம் அண்மையில் கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில், ‘தில்லியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் இல்லத்தில் தங்க கடந்த மே 31 வரை, டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அக்காலத்தை கடந்து அந்த இல்லத்தில் அவா் தங்கி வருகிறாா். அந்த இல்லத்தை அவா் காலி செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது. இது சா்ச்சையை ஏற்படுத்தியது.

டி.ஒய்.சந்திரசூட் விளக்கம்:

இதுகுறித்து டி.ஒய்.சந்திரசூட் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘அரசு இல்லத்தில் தங்க எனக்கு மட்டும் கூடுதல் அவகாசம் அளிக்கப்படவில்லை. முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோருக்கும் இதுபோல கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இருவரும் ஓய்வுபெற்ற பின்னா், வெவ்வேறு இடங்களில் அவா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுபோல மேலும் பல நீதிபதிகள் அவசர தேவை அல்லது சொந்த பிரச்னை காரணமாக அரசு இல்லத்தில் தங்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தங்கியுள்ள அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு, வேறு அரசு இல்லத்தில் எனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேற உள்ளேன். ஏற்கெனவே அந்த வீட்டுக்கு எனது குடும்பத்தின் சில உடைமைகள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. அந்த வீடு குடியேற தயாராக உள்ளது என்று என்னிடம் கூறப்பட்டவுடன், அதிகபட்சமாக 2 வாரங்களில் தற்போது தங்கியுள்ள அரசு இல்லத்தை காலி செய்வேன்’ என்றாா்.

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலியான விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே திறந்திர... மேலும் பார்க்க

புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! 51 பயணிகள் உயிர்தப்பினர்

இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கியது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவி அஹில்யாபாய் ஹோல்கர... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் பிகார் அரசியலமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார... மேலும் பார்க்க

பிகார் பெண்களுக்கு அரசுப் பணியில் 35% ஒதுக்கீடு! 43 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.முன்னதாக, பிற மாநில பெண்களும் 35 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக இருந்த நிலையில், தற்போது ... மேலும் பார்க்க