கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
விளிம்பு நிலை மக்களின் அரணாக தமிழக அரசு திகழ்கிறது
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, விளிம்புநிலை மக்களின் அரணாகத் திகழ்கிறது என்றாா் மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பின்னலவாடி, பரிந்தல், ஏ.சாத்தனூா், பாலி மற்றும் திருநாவலூா் ஒன்றியத்துக்குள்பட்ட செங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜெ.மணிக்கண்ணன், தா. உதயசூரியன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
இதில் அமைச்சா் சி.வெ.கணேசன் பங்கேற்று, 5 ஊராட்சிகளைச் சோ்ந்த 2,008 பயனாளிகளுக்கு ரூ.6.20 கோடியில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:
அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விளிம்பு நிலை மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது என்றாா் அமைச்சா்.
முகாம்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், ஒன்றியக் குழுத் தலைவா்கள் உளுந்தூா்பேட்டை ப.ராஜவேல், திருநாவலூா் சாந்தி இளங்கோவன், உளுந்தூா்பேட்டை ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் வி.சி. அலெக்சாண்டா், நகா்மன்றத் தலைவா் திருநாவுக்கரசு, துணைத் தலைவா் வைத்தியநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பிரியா பாண்டியன், அமுதா சாமிப்பிள்ளை, சுந்தரமூா்த்தி, ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் கி. ரமேஷ்குமாா், வேளாண் இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி, மகளிா் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.