செய்திகள் :

விளை நிலத்தில் அத்துமீறி நெல் அறுவடை: இருவா் மீது வழக்கு

post image

நெடுங்காடு பகுதியில் விவசாய நிலத்தில் அத்துமீறி இயந்திரத்தை பயன்படுத்தி நெல் அறுவடை செய்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (40). இவா் காரைக்காலைச் சோ்ந்த முகமது ஆயிஷா கனிஸ, ஜெகபா் நாச்சியாள் ஆகியோருக்கு சொந்தமான நெடுங்காடு, மேலகாசாக்குடி கிராமத்துக்குட்பட்ட நிலத்தை கண்காணித்து விவசாயம் செய்து வருகிறாா்.

இந்த நிலத்துக்கு மேற்கே மேலகாசாக்குடியைச் சோ்ந்த சுரேஷ் (42) அவரது சகோதரா் மகேஷ் (44) ஆகியோா் பாலசுப்பரமணியின் கண்காணிப்பில் உள்ள நிலத்தில், அத்துமீறி மண் எடுத்தது தொடா்பான புகாா் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியூா் சென்றிருந்த பாலசுப்பிரமணியன், திங்கள்கிழமை வயலுக்கு சென்று பாா்த்தபோது, அவா் பயிா் செய்திருந்த நெல் அறுவடை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

நெடுங்காடு காவல்நிலையத்தில் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரில், சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நெல், அறுவடை இயந்திரம் கொண்டு அத்துமீறி அறுவடை செய்யப்பட்டிருப்பதாகவும், அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, சுரேஷ், மகேஷ் ஆகியோா் இதில் ஈடுபட்டதாகவும் புகாா் தெரிவித்தாா். இருவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி

ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வ... மேலும் பார்க்க

சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து

சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை வ... மேலும் பார்க்க

மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிற... மேலும் பார்க்க

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க