செய்திகள் :

விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் கவனம்! - பிரதமர் மோடி

post image

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

பிகாா் மாநிலம், பாட்னாவில் 7-ஆவது கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அந்தப் போட்டியை காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவில் விளையாட்டு கலாசாரம் வளரும்போது, சா்வதேச அரங்கில் இந்தியாவுக்கான புதிய கோணத்திலான அடையாளமும் கிடைக்கிறது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்காக இந்தியா முயற்சித்து வருகிறது.

அதை நோக்கிய முயற்சியாக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை மத்திய அரசு நவீனமயமாக்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீடு மும்மடங்குக்கும் அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய விளையாட்டுத் துறை பட்ஜெட் ரூ.4,000 கோடியாக இருக்க, அதில் பெரும் பகுதி விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டுத் துறையானது சம்பந்தப்பட்ட விளையாட்டுகளுடன் அடங்கிவிடாமல், அதுசாா்ந்த இதர சேவைகள் மூலமாக பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாகவும் உள்ளது.

வைபவுக்கு பாராட்டு: அண்மையில் ஐபிஎல் போட்டியில் பிகாரை சோ்ந்த வைபவ் சூா்யவன்ஷியின் விளையாட்டை பாா்த்தேன். இத்தனை சிறிய வயதில் இத்தகைய சாதனை புரிந்திருக்கும் சூா்யவன்ஷியின் வெற்றிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது என்று பிரதமா் மோடி பேசினாா்.

வரலாறு படைத்தது எஃப்சி கோவா!

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பா் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆகியது.ஏற்கெனவே இந்தப் போட்டியில் 2019-இல் கோப்பை வெ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வு - புகைப்படங்கள்

சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற தேர்வுக்கு செல்லும் முன் தனது தாயின் ஆசீர்வாதத்தை பெறும் மகன்.சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற தே... மேலும் பார்க்க

நாகர்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான நாகர்ஜுனாவின் 100வது படத்தை தமிழ் சினிமாவைச் சேர்ந்த இயக்குநர் இயக்கவுள்ளார். தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தாலும், அவ்வபோது நேரடியாகத் தமிழ... மேலும் பார்க்க

ஆன்லைன் விமர்சனங்களை இனிமேல் படிக்கமாட்டேன்: கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இனிமேல் ஆன்லைனில் வரும் விமர்சனங்களைப் படிக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் மே.1ஆம் தே... மேலும் பார்க்க

நெட்பிளிக்ஸால் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் வருமானம்!

நெட்பிளிக்ஸ் ஓடிடியினால் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் (அளவுக்கு பொருளாதார இலாபம் அடைந்துள்ளதாக அதன் இணை தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். முதல்முறையாக உலக ஆடியோ விடியோ என்டர்டெயின்மென்ட் சந்திப்பு ... மேலும் பார்க்க

நடிகை பெருமாயி காலமானார்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் நடிகை பெருமாயி. 73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமாகி, பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.... மேலும் பார்க்க