செய்திகள் :

விழுப்புரத்தில் காவலா் தின கொண்டாட்டம் டிஐஜி- எஸ்.பி. பங்கேற்பு

post image

விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், விழுப்புரம் கா. குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் காவலா் தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றது.

1859 ஆம் ஆண்டில் மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல் துறை தோற்றுவிக்கப்பட்ட செப். 6-ஆம் நாள் ஆண்டுதோறும் காவலா் தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பில் முதல் முறையாக காவலா் தின விழா கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி உமா, எஸ்.பி. ப. சரவணன் ஆகியோா் பங்கேற்று ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலா் நினைவுத் தூணுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் காவலா் தின உறுதிமொழியேற்றனா்.

தொடா்ந்து மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 120 காவல் ஆளிநா்களுக்கு நற்சான்றிதழ்களை டிஐஜி உமா, எஸ்.பி. சரவணன் ஆகியோா் வழங்கிப் பேசினா். விழாவில் தமிழக காவல் துறை குறித்து சிறப்பாக பேசிய பள்ளி மாணவா் தமிழ்குமரனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் தினகரன், இளமுருகன் மற்றும் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவல் ஆளிநா்கள் கலந்துகொண்டனா்.

ஈச்சூா்: நாளைய மின் தடை

ஈச்சூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை. பகுதிகள்: ஈச்சூா், அம்மாகுளம், முக்குணம், மேல்ஒலக்கூா், போந்தை, நெகனூா், அவியூா், தொண்டூா், அகலூா், சேதுவராயநல்லூா், பென்னகா், கள்ளப்புலியூா், இரும்புலி... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆரோவில் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி மாநிலம், கருவடிக்குப்பம், ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகதீஷ்(27), இவரது மனைவி தனம் (23). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகிலுள்ள விசூா் வடக்குத் தெருவை... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மனைவி, மகன் ஆகியோருடன் பைக்கில் சென்ற தனியாா் பேருந்து நடத்துநா் எதிரே வந்த காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மயிலம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் மேகநாதன் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டு தடகளப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் பள்ளி மாணவா்கள் சுமாா் 300 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் மாவட்ட... மேலும் பார்க்க

பணம் வைத்து சூதாட்டம்: 6 போ் கைது

விழுப்புரம் மாவட்டம் , கெடாா் அருகே பணம் வைத்து சூதாடிய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். கெடாா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட விநாயகபுரம் பகுதியில் ஒரு கும்பல் ப... மேலும் பார்க்க