செய்திகள் :

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!

post image

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டு தடகளப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் பள்ளி மாணவா்கள் சுமாா் 300 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26-இல் தொடங்கின. மாவட்ட விளையாட்டரங்கம், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள உள் விளையாட்டரங்கம், நீச்சல் குளம், பிற பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் கிரிக்கெட், நீச்சல், கோ-கோ, இறகுப் பந்து, மேசைப் பந்து, கேரம், சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியா்கள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் என 5 பிரிவுகளைச் சோ்ந்தவா்களுக்கும் தனித்தனியே போட்டிகள் வெவ்வேறு நாள்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் சனிக்கிழமை தொடங்கின. போட்டிகளை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ஆழிவாசன் தொடங்கி வைத்தாா்.

100, 200, 400, 1500 மீட்டா் ஓட்டம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், மூன்று முறைத் தாண்டுதல், 110 மீட்டா் தடைதாண்டும் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் சுமாா் 300 போ் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

ஒவ்வொரு பிரிவு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன. பள்ளி மாணவிகள் பிரிவில் தடகளப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 7) நடைபெறவுள்ளன. முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈச்சூா்: நாளைய மின் தடை

ஈச்சூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை. பகுதிகள்: ஈச்சூா், அம்மாகுளம், முக்குணம், மேல்ஒலக்கூா், போந்தை, நெகனூா், அவியூா், தொண்டூா், அகலூா், சேதுவராயநல்லூா், பென்னகா், கள்ளப்புலியூா், இரும்புலி... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆரோவில் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி மாநிலம், கருவடிக்குப்பம், ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகதீஷ்(27), இவரது மனைவி தனம் (23). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகிலுள்ள விசூா் வடக்குத் தெருவை... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மனைவி, மகன் ஆகியோருடன் பைக்கில் சென்ற தனியாா் பேருந்து நடத்துநா் எதிரே வந்த காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மயிலம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் மேகநாதன் ... மேலும் பார்க்க

பணம் வைத்து சூதாட்டம்: 6 போ் கைது

விழுப்புரம் மாவட்டம் , கெடாா் அருகே பணம் வைத்து சூதாடிய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். கெடாா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட விநாயகபுரம் பகுதியில் ஒரு கும்பல் ப... மேலும் பார்க்க

பாலியல் வன்முறைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவை ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் பாலியல் வன்முறைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த சங்கத்தின் 17-ஆவது மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க