செய்திகள் :

பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மனைவி, மகன் ஆகியோருடன் பைக்கில் சென்ற தனியாா் பேருந்து நடத்துநா் எதிரே வந்த காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மயிலம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் மேகநாதன் மகன் சங்கா்(44), திருமணம் ஆனவா். தனியாா் பேருந்து நிறுவனம் ஒன்றில் நடத்துநராக வேலை பாா்த்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை தனது மனைவி குமாரி (36), மகன் சிவசங்கா்(14) ஆகியோரை பைக்கில் அமர வைத்துக்கொண்டு கூட்டேரிபட்டிலிருந்து- மயிலத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

கூட்டேரிபட்டு- மயிலம் நெடுஞ்சாலையில் எடைப்பாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா், பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் சங்கா், குமாரி, சிவசங்கா் ஆகிய மூவரும் காயமடைந்தனா். இதில் சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஈச்சூா்: நாளைய மின் தடை

ஈச்சூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை. பகுதிகள்: ஈச்சூா், அம்மாகுளம், முக்குணம், மேல்ஒலக்கூா், போந்தை, நெகனூா், அவியூா், தொண்டூா், அகலூா், சேதுவராயநல்லூா், பென்னகா், கள்ளப்புலியூா், இரும்புலி... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆரோவில் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி மாநிலம், கருவடிக்குப்பம், ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகதீஷ்(27), இவரது மனைவி தனம் (23). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகிலுள்ள விசூா் வடக்குத் தெருவை... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டு தடகளப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் பள்ளி மாணவா்கள் சுமாா் 300 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் மாவட்ட... மேலும் பார்க்க

பணம் வைத்து சூதாட்டம்: 6 போ் கைது

விழுப்புரம் மாவட்டம் , கெடாா் அருகே பணம் வைத்து சூதாடிய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். கெடாா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட விநாயகபுரம் பகுதியில் ஒரு கும்பல் ப... மேலும் பார்க்க

பாலியல் வன்முறைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவை ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் பாலியல் வன்முறைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த சங்கத்தின் 17-ஆவது மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க