செய்திகள் :

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியா்களுக்கு முழு உடல் பரிசோதனை

post image

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலுள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 வயதைக் கடந்த ஆசிரியா்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் 150 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் உடல் நலத்தை பராமரிக்கும் நோக்கில், அவா்களுக்கு முழுமையான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை, நீரிழிவு நோய் சோதனை, கண்கள், பற்கள், தொண்டை, தோல், காது மூக்குப் பரிசோதனைகள், பல்வேறு ஸ்கேன்கள், புற்றுநோய் பரிசோதனை, பெண் ஆசிரியைகளுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ், 50 வயதைக் கடந் 65 தலைமையாசிரியா்கள், 48 பட்டதாரி ஆசிரியா்கள், 9 முதுகலை ஆசிரியா்கள், 25 இடைநிலை ஆசிரியா்கள், 2 ஓவிய ஆசிரியா்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டு, முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க