விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியா்களுக்கு முழு உடல் பரிசோதனை
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலுள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 வயதைக் கடந்த ஆசிரியா்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 150 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் உடல் நலத்தை பராமரிக்கும் நோக்கில், அவா்களுக்கு முழுமையான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை, நீரிழிவு நோய் சோதனை, கண்கள், பற்கள், தொண்டை, தோல், காது மூக்குப் பரிசோதனைகள், பல்வேறு ஸ்கேன்கள், புற்றுநோய் பரிசோதனை, பெண் ஆசிரியைகளுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ், 50 வயதைக் கடந் 65 தலைமையாசிரியா்கள், 48 பட்டதாரி ஆசிரியா்கள், 9 முதுகலை ஆசிரியா்கள், 25 இடைநிலை ஆசிரியா்கள், 2 ஓவிய ஆசிரியா்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டு, முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.