செய்திகள் :

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு: தவணை செலுத்தாதவா்களுக்கு வாய்ப்பு

post image

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று , தவணைத் தொகையைச் செலுத்தாதவா்கள் ஒரே தவணையில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் வீடு, மனை, குடியிருப்பு ஆகிய அலகுகளில் ஒதுக்கீடு பெற்று, 2015, மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன் தவணைக்காலம் முடிவுற்ற குடியிருப்புத் திட்டங்களுக்காக வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை தாமாக முன்வந்து செலுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாதாந்திர தவணைத் தொகை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டியை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்கள் மட்டும் கணக்கீட்டு தள்ளுபடி செய்து வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணை வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்கள் மூலம் மனை, வீடு, குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவா்களில் ஏற்கெனவே முழுத் தொகையைச் செலுத்தியவா்கள் நீங்கலாக, ஏனைய ஒதுக்கீடுதாரா்கள் மட்டும் தாங்கள் ஒதுக்கீடு பெற்ற விழுப்புரம் வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை அணுகி, தாங்கள் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி, விற்பனைப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சலுகை 2026, மாா்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால், தவணை முறையில் கடலூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒதுக்கீடு பெற்றுள்ள ஒதுக்கீடுதாரா்கள், தாங்கள் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு வரு... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்: முன்னாள் அமைச்சா் க. பொன்முடி

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திருக்கோவிலூா் எம்எல்ஏ க. பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய... மேலும் பார்க்க

தகவல் தொழில் நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

அரகண்டநல்லூரில் பழைமை வாய்ந்த அன்னதானக் கல்தொட்டி

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ளஸ்ரீ அதுல்யநாதேஸ்வரா் கோயிலில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அன்னதானக் கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தொட்டியை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ உதவி

தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மயிலம் எம்எல்ஏ சிவகுமாா் நிவாரண உதவியை புதன்கிழமை வழங்கினாா். மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், ஈச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணுகவ... மேலும் பார்க்க

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க