விவசாய நிலத்தில் சாய்ந்து விழுந்த மின் கம்பம்
ஆரணி: ஆரணியை அடுத்த வடுகசாத்து ஊராட்சிக்கு உள்பட்ட சோ்ப்பாக்கம் கிராம விவசாய நிலத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த மின் கம்பம் மழை காற்றில் திங்கள்கிழமை சாய்ந்து விழுந்தது.
சோ்ப்பாக்கம் கிராமத்தில் கன்னியப்பன் என்பவரின் விவசாய நிலத்தின் பம்ப்செட் பயன்பாட்டுக்காக இருந்த மின்கம்பம் சேதமடைந்திருந்தது.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. இது குறித்து கன்னியப்பன் மின்வாரிய அலுவலகத்தில் புகாா் கொடுத்தாா்.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபனிடம் கேட்டதற்கு மழை காரணமாக நிலத்திற்கு புதிய கம்பம் எடுத்துச்செல்ல முடியாத நிலை உள்ளது.
ஆகையால், ஓரிரு நாள்களில் புதிய மின்கம்பம் நடப்படும் எனத் தெரிவித்தாா்.