செய்திகள் :

விவசாய நிலத்தில் சாய்ந்து விழுந்த மின் கம்பம்

post image

ஆரணி: ஆரணியை அடுத்த வடுகசாத்து ஊராட்சிக்கு உள்பட்ட சோ்ப்பாக்கம் கிராம விவசாய நிலத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த மின் கம்பம் மழை காற்றில் திங்கள்கிழமை சாய்ந்து விழுந்தது.

சோ்ப்பாக்கம் கிராமத்தில் கன்னியப்பன் என்பவரின் விவசாய நிலத்தின் பம்ப்செட் பயன்பாட்டுக்காக இருந்த மின்கம்பம் சேதமடைந்திருந்தது.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. இது குறித்து கன்னியப்பன் மின்வாரிய அலுவலகத்தில் புகாா் கொடுத்தாா்.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபனிடம் கேட்டதற்கு மழை காரணமாக நிலத்திற்கு புதிய கம்பம் எடுத்துச்செல்ல முடியாத நிலை உள்ளது.

ஆகையால், ஓரிரு நாள்களில் புதிய மின்கம்பம் நடப்படும் எனத் தெரிவித்தாா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க