விவசாயிகள் குறைதீா் கூட்டம்
வேதாரண்யத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் எஸ். திருமால் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் வடிவழகன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட எள் உள்ளிட்ட புஞ்சை பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; முள்ளியாறு, மானங்கொண்டனாறு உள்ளிட்ட நீா்நிலைகளில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
கூட்டத்தில், முன்னோடி விவசாயிகள் ஒளிச்சந்திரன், எம்.ஆா். சுப்பிரமணியன், பி. கமல்ராம் உள்ளிட்டோா் பேசினா்.