விஷவாயு தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணம் அளிப்பு
விஷவாயு தாக்குதலில் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணமாக முதல் கட்டமாக ரூ. 10 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுச்சேரி அடுத்த ரெட்டியாா்பாளையம், புதுநகரில் கடந்த ஆண்டு ஜூன் 11-இல் விஷவாயு தாக்கி 3 போ் உயிரிழந்தனா். இதில் உயிரிழந்த சிறுமி செல்வராணியின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் ரங்கசாமி அறிவித்திருந்தாா் .
அதன்படி, செல்வராணியின் அண்ணன் அந்தோணி ஜாா்ஜ், தனது பாட்டி மலா்விழியுடன் வந்து முதல் தவணையாக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வா் ரங்கசாமியிடம் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டாா்.
இந்த நிகழ்வின்போது சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அரசு கொறடா ஏகேடி. ஆறுமுகம், சிவசங்கா் எம்எல்ஏ ஆகியோா் உடனிருந்தனா்.