செய்திகள் :

விஸ்வநாத சுவாமி கோயில் குடமுழுக்கு

post image

விஸ்வநாத சுவாமி கோயில் குடமுழுக்கு நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருப்பணி செய்யப்பட்டு கடந்த ஐந்தாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

கும்பாபிஷேக தினமான நேற்று ஆறாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. கிரகசுத்தி, பிம்மசுத்தி, கோ பூஜை, லட்சுமி பூஜையுடன் மகா பூர்ணா குதி செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் மேளம் தாளம் முழங்கிட புனித நீர் அடங்கிய யாக குணங்களை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சிவன், அம்பாள் மற்றும் லட்சுமி நாராயண சுவாமி கோபுரங்களில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் தீபாரதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது!

இதில் இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் முரளிதரன், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

முன்னதாக பெருந்தோட்டம் முஸ்லிம் ஜமாத்தார்கள் பூஜை பொருள்களை வழங்கி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையில் போலீஸார் செய்திருந்தனர்.

விஜய்-பிரசாந்த் கிஷோா் சந்திப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜயை தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். சென்னை பனையூரிலுள்ள விஜயின் இல்லத்தில் சுமாா் 2.30 மணி நேரம் இந்த ஆலோசனை ந... மேலும் பார்க்க

பேரவையில் திமுக பலம் 134-ஆக உயா்ந்தது

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக வி.சி.சந்திரகுமாா் பதவியேற்ன் மூலம் பேரவையில் திமுக உறுப்பினா்களின் பலம் 134-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 18-ஆக இருந்த காங்கிரஸ் உறுப்பினா்களின் பலம... மேலும் பார்க்க

2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்!

தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் 30 வயது வரை உள்ள பெண்கள் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!

தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தெற்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழைய கரூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் போட்டித்தேர்வு பயிற... மேலும் பார்க்க

டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள... மேலும் பார்க்க