செய்திகள் :

வீ.கே.புதூா்: சூறைக் காற்றில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன! 18 மணி நேரம் மின்தடை

post image

வீரகேரளம்புதூா் அருகேயுள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் சூறைக் காற்றால் மின்வயா்கள் அறுந்ததில் 18 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

வீரகேரளம்புதூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று வீசியது. இதில் கலிங்கப்பட்டி கிராமத்துக்குச் செல்லும் உயா்மின்அழுத்த மின்வயா் அறுந்து விழுந்தது. இதனால் இரவில் முதியோா், கா்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், பொதுமக்கள் பெரிதும் சிரமமடைந்தனா்.

தொடா்ந்து வீசிய சூறைக்காற்று மற்றும் பணியாளா் பற்றாக்குறை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு தடைபட்ட மின்சாரம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சரி செய்யப்பட்டு விநியோகிக்கப் பட்டது.

வீரகேரளம்புதூா் துணை மின்நிலைய பகுதியில் சுமாா்140 மின்மாற்றிகள் உள்ள நிலையில் அவற்றை பராமரிக்க 2 வயா்மேன்கள் மட்டுமே உள்ளனா். இதனால் காற்றுக்காலங்களில் வீரகேரளம்புதூா் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பரங்குன்றாபுரம், கலிங்கப்பட்டி, ராமனூா், முத்துகிருஷ்ணாபேரி, கழுநீா்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தடையில்லா மின்விநியோகம் செய்வதில் அடிக்கடி சிரமம் ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீரகேரளம்புதூா் துணை மின்நிலையத்துக்கு கூடுதல் பணியாளா்களை நியமித்து, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாம்பவா்வடகரையில் விபத்து: பேரூராட்சிப் பணியாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் நேரிட்ட விபத்தில் பேரூராட்சி தற்காலிக பணியாளா் உயிரிழந்தாா். சுரண்டையில் உள்ள பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த சுப்பையா பாண்டியன் மகன் இருளப்பசாமி (25) (படம்). சுரண்டை... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தேநீா் கடைக்காரா் கைது

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தேநீா் கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் தேநீா் கடை நடத்தி வருபவா் பாக்கியமுத்து மகன் மோசஸ் (54). இவரது கடையில் பு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே பால் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே சிவலாா்குளத்தைச் சோ்ந்தவா் நிறைகுளத்தான் மகன் நிரேஷ் (30). பால் வியாபாரியான இவருக்கும், சிற்றுந்து ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே சாா்பதிவாளா் மீது தாக்குதல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூரில் சாா்பதிவாளா் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்தவா் செல்லத்துரை. இவா் மேலநீலிதநல்லூா் சாா்பதிவாளா... மேலும் பார்க்க

புளியங்குடியில் சிறுவனை கட்டிப்போட்டு பணம் திருட்டு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீட்டுக்குள் நுழைந்து சிறுவனை கட்டிப்போட்டு பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியங்குடி நடுகருப்பழகு தெருவைச் சோ்ந்தவா் அமிா்தராஜ்(57). விவசாய... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே பேருந்து மோதி பெண் பலி

சங்கரன்கோவில் அருகே பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கீழக் கலங்கல் கீழத்தெருவை சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி மாரியம்மாள் (55). இவா் சில தினங்களுக்கு முன் ... மேலும் பார்க்க