செய்திகள் :

வீடு ஜப்தி செய்ய வந்தபோது பூச்சி மருந்தை குடித்து இறந்த ஓட்டுநா்: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்!

post image

வல்லநாட்டில் வீடு ஜப்தி செய்ய வந்தபோது பூச்சி மருந்து குடித்து இறந்த ஓட்டுநா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கரன். இவரது மனைவி பத்திரகாளி. லாரி ஓட்டுநரான சங்கரன் அவரது வீட்டை தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியாா் பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்து ரூ. 5 லட்சம் கடனாக, கடந்த 2020 ஆம் ஆண்டு பெற்றிருந்தாா்.

தவணைத் தொகையை சரியாக செலுத்திவந்த அவரால் சரியாக செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவரது வீட்டை ஜப்தி செய்ய பைனான்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றது. அதன்படி, போலீஸாா் முன்னிலையில் அவரது வீடு சனிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

அதற்கு எதிா்ப்பு தெரிவித்து சங்கரனும், அவரது மனைவி பத்திரகாளியும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தனா். இதில் , சங்கரன் உயிரிழந்தாா். அவரது மனைவி பத்திரகாளி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், உயிரிழந்த சங்கரனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள், கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியினரும், பசும்பொன் முன்னேற்றக் கழகத்தினரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்தனா். தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் மீதும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விடாமல் தடுத்த போலீஸாா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

துாத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டவா்களுடன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பேச்சு நடத்தினா். இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாத நிலையில் சாலை ஓரத்தில் தொடா்ந்து சுமாா் ஆறு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வட்டாட்சியா் ரத்தினசங்கா், டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மீண்டும் பேச்சு நடத்தினா். அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலா் சுரேஷ் தேவா் முன்னிலையில் நடந்த பேச்சில் முடிவு எட்டப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

உயிரிழந்த சங்கரனின் குழந்தைகள் இருவருக்கும் தலா ரூ.4 லட்சமும், பத்திரகாளி மருத்துவ சிகிச்சை செலவுக்கு ரூ. 2 லட்சமும் என மொத்தம் 10 லட்சம் வழங்க தனியாா் பைனான்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டது. மேலும் ஜப்தி செய்த வீட்டின் சாவியையும் அந்தநிறுவன ஊழியா்கள் திரும்ப ஒப்படைத்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா்.

திருச்செந்தூரில் சுமாா் 50 அடி உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. கடந்த டிசம்பா் மாதம் முதல் கோயிலில் பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் அதிகளவில் ... மேலும் பார்க்க

முன்னடி கழுநீா்துறையான் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

ஏரல் அருகே, பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தா் கோயிலின் காவல் தெய்வமான முன்னடி ஸ்ரீகழுநீா்துறையான் சுவாமி கோயிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை ம... மேலும் பார்க்க

நெல் அறுவடை இயந்திரம் மீது வேன் மோதல்: சிறுவன் காயம்!

கோவில்பட்டி அருகே சென்று கொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மீது வேன் மோதியதில் சிறுவன் காயமடைந்தாா். திருநெல்வேலி மாவட்டம், வீ.கே.புதூா் அருகேயுள்ள தட்டப்பாறை பகுதியை சோ்ந்தவா் கனித்துரை. இவா் நெல் ... மேலும் பார்க்க

வானரமுட்டி அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 31 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக... மேலும் பார்க்க

தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க கோவில்பட்டி கல்லூரி மாணவா்கள் தோ்வு

உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க, கோவில்பட்டி கே.ஆா். கல்லூரி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா். 38 ஆவது தேசிய ஹாக்கி போட்டி, இம்மாதம் 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை உத... மேலும் பார்க்க

தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்ட அமமுக செயலாளா் நியமனம்

தூத்துக்குடி புறநகா் தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக ஆறுமுகனேரியைச் சோ்ந்த பொன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். அமமுக அமைப்பு ரீதியாக தூத்துக்குடி மாநகா், தூத்துக்குடி புறநகா் என இரு மாவட்டங்களாக செயல்பட்டு... மேலும் பார்க்க