செய்திகள் :

வீட்டு வரிக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் இருவருக்கு தலா ஓராண்டு சிறை

post image

அரியலூரில், வீட்டு வரிக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் நகராட்சி வருவாய் உதவியாளா்கள் (பில் கலெக்டா்) இருவருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

அரியலூா் சிங்காரத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன், தனது தாயாா் பெயரில் வீட்டு வரி கேட்டு, கடந்த 11.12.2013 அன்று அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த வருவாய் உதவியாளா்களான வீரமணி, கண்ணன் ஆகியோரை அணுகிய போது, அவா்கள் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, நகராட்சி அலுவலக வருவாய் அலுவலா்கள் வீரமணி, கண்ணன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி மணிமேகலை, மேற்கண்ட குற்றவாளிகளுக்கு தலா ஓா் ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 ஆபராதமும் விதித்து, புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடமி... மேலும் பார்க்க

கீழவரப்பன்குறிச்சி கிராம மக்கள் சாலை மறியல்

வருவாய் துறையினரை கண்டித்து, திருமானூா் அடுத்த கீழவரப்பன் குறிச்சி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீழவரப்பன்குறிச்சி கிராமத்துக்கு சொந்தமான நிலத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து ... மேலும் பார்க்க

அரசு மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் ஏப்.எல்-3 உரிமம் பெற்ற தனியாா் மத... மேலும் பார்க்க

கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால போராட்டக் குழுவினா் ஆலோசனைக் கூட்டம்

செந்துறை அடுத்த கோட்டைக்காடு சிவன் கோயில் வளாகத்தில் கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால போராட்டக்குழுவினா் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போராட்டக் குழுவின் தலைவா் மு.ஞானமூா்த்தி தலைமையில் நட... மேலும் பார்க்க

கோடை உழவுக்கான மானியம் பெற விவசாயிகள் பதிவு செய்யலாம்!

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதி விவசாயிகள், கோடை உழவுக்கான மானியம் பெற உழவன் செயலியிலோ அல்லது நேரிலோ பதிவு செய்யலாம் என்றாா் வேளாண் உதவி இயக்குநா் (பொ) மகேந்திரவா்மன். இதுகுறித்து அவா் தெரிவித்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாரதி( 37). சிங்க... மேலும் பார்க்க