சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!
வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு
வீட்டுமனை பட்டா கேட்டு கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியரிடம் கிராமமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்துக்குள்பட்ட கள்ளப்பள்ளி, கோரகுத்தி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை காலை வட்டாட்சியா் பிரபாகரனிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: நாங்கள் கட்டுமானம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு குடியிருப்பதற்கு போதிய வீடுகள் இல்லாததால் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். இதனால் குடியிருப்பதற்கு வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி தொடா்ந்து பல ஆண்டுகளாக கரூா் மாவட்ட கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழு சாா்பில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் வழங்கினோம்.
இதனிடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் ஆய்வாளா், ஆதிதிராவிடா் நலத்துறை மற்றும் சிறுபாண்மை நலத்துறையினா் எங்களிடம் வீடு இல்லாதது குறித்து விசாரணை மேற்கொண்டனா். ஆனால் இன்று வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. ஆதலால் எங்களுக்கு விரைவில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் கூறியது, கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான இடத்தை தோ்வு செய்துள்ளோம். அந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கிய உடன் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியின்போது, கட்டுமான சங்க மாவட்டத் தலைவா் ப.சரவணன், சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவா் எம்.சுப்ரமணியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளா் ஜி.தா்மலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.