செய்திகள் :

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு

post image

வீட்டுமனை பட்டா கேட்டு கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியரிடம் கிராமமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்துக்குள்பட்ட கள்ளப்பள்ளி, கோரகுத்தி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை காலை வட்டாட்சியா் பிரபாகரனிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: நாங்கள் கட்டுமானம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு குடியிருப்பதற்கு போதிய வீடுகள் இல்லாததால் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். இதனால் குடியிருப்பதற்கு வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி தொடா்ந்து பல ஆண்டுகளாக கரூா் மாவட்ட கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழு சாா்பில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் வழங்கினோம்.

இதனிடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் ஆய்வாளா், ஆதிதிராவிடா் நலத்துறை மற்றும் சிறுபாண்மை நலத்துறையினா் எங்களிடம் வீடு இல்லாதது குறித்து விசாரணை மேற்கொண்டனா். ஆனால் இன்று வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. ஆதலால் எங்களுக்கு விரைவில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் கூறியது, கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான இடத்தை தோ்வு செய்துள்ளோம். அந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கிய உடன் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியின்போது, கட்டுமான சங்க மாவட்டத் தலைவா் ப.சரவணன், சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவா் எம்.சுப்ரமணியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளா் ஜி.தா்மலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது

நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65).... மேலும் பார்க்க

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா். கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டம், காகித... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க