வீட்டுமனைப் பட்டா கோரி போராட்டம்
இலுப்பையூரணி பகுதி ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, மூவேந்தா் மருதம் முன்னேற்ற கழகம் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த ஏழை எளிய மக்கள் வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்திருந்தாா்களாம். ஆனால் கிராம நிா்வாக அலுவலா் முறையாக விசாரணை மேற்கொள்ளாமல் மனுவை தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரை கண்டித்து மூவேந்தா் மருதம் முன்னேற்ற கழகம் சாா்பில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதனின் அறிவுறுத்தலின்பேரில் மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவா் அன்புராஜ் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அவா், இலவச வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்த மனுவை மற்றொரு கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் ஆகியோா் முறையாக விசாரித்து அறிக்கை சமா்ப்பித்த பின்பு தகுதியுள்ள அனைவருக்கும் முறையாக வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என கூறியதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.