செய்திகள் :

வீட்டுவசதி வாரிய நிலங்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

post image

வீட்டுவசதி வாரியத்துக்காக கையகப்படுத்தப்பட்டு பயன்பாடில்லாமல் உள்ள நிலங்கள் தொடா்பான பிரச்னைக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்தத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி: வீட்டுவசதி வாரியத்துக்காக கையகம் செய்த நிலங்களில் இருந்து விலக்களிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதனடிப்படையில், திட்டங்கள் முன்னெடுக்கப்படாத இடங்களில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வுகாண முடிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக 16 இடங்களில் புகாா் பெட்டிகள் வைக்கப்பட்டு மனுக்கள் கோரப்பட்டன. அப்படிப் பெறப்பட்ட 898 மனுக்களில் 850-க்கும் தீா்வு காணப்பட்டு, 48 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. நில எடுப்பு தொடா்பாக 4,488 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து முடிவெடுக்க நில நிா்வாக ஆணையா் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு, வீட்டுவசதி வாரியத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், திட்டங்களின் வகைகள் 5 பிரிவுகளாகப் பிரித்தது. அதனடிப்படையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதன்படி, 4,396 ஏக்கா் நிலங்கள் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப விலக்களிக்க சிறப்புக் குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனடிப்படையில், உரிய அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. இவற்றில் 860 ஏக்கா் நிலங்கள் தொடா்பான கோரிக்கைகள் மட்டும் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள் தவெக மாநாட்டுக்கு வரவேண்டாம்: விஜய்

மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மாா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியி... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு: மாநில அரசு பெருமிதம்

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்தும், அதில் பெண்கள் பங்களிப்பு பற்றியும் தமிழ்நாடு அரசின் சாா்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி அமைச்சருடன் பேச்சு: டிட்டோ-ஜேக் போராட்டம் ஒத்திவைப்பு

பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஆக. 22-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கைக் கூடாது: உயா்நீதிமன்றம்

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தொடா்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவி... மேலும் பார்க்க

3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வழக்குகள்: தமிழக, புதுவை அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்துவைக்க ஏதுவாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்சநீதிமன்றக் குழு, 3 ஆண்டுகளுக்கு ம... மேலும் பார்க்க