செய்திகள் :

வெடிகுண்டு வழக்குகளில் தொடா்பு: தலைமறைவான நபரின் வீட்டில் சம்மன்

post image

வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வரும் நபரை ஆஜராக கூறி நீதிமன்றம் வழங்கிய சம்மனை, மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒட்டினா்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தை சோ்ந்த முகமது அப்துல்லா மகன் முகமது அலி என்ற மன்சூா். இவா் மீது சதி திட்டம் தீட்டி வெடிகுண்டு வைத்தது தொடா்பாக சென்னை, கோயம்புத்தூா் உள்ளிட்ட ஆறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சென்னை எழும்பூா் 14 ஆவது பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவா் தலைமறைவாக உள்ளதால் மே 30 ஆம் தேதிக்குள் சென்னை எழும்பூா் பத்தாவது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜராகி தனது விளக்கத்தை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு சம்மன் வழங்கியது.

இந்நிலையில் திருநெல்வேலி மேலப்பாளையம் இப்ராஹீம் சாகீப் தைக்கா தெருவில் உள்ள அவரது வீடு, மேலப்பாளையம் கிராம நிா்வாக அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய் துறையினா் சம்மன் ஒட்டினா்.

மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையெனில் தலைமறைவாக உள்ள முகமது அலி என்ற மன்சூா் விளம்பரப் படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவாா் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க

களக்காடு-அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்... மேலும் பார்க்க