செய்திகள் :

வெந்நீரால் வெந்துபோன சிறுவனின் உடல் பாகங்கள்: ஒரே வாரத்தில் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை

post image

கொதிக்கும் நீா் மேலே பட்டதில் உடல் பாகங்கள் வெந்துபோன இரண்டரை வயது சிறுவனை ஒரே வாரத்தில் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து அம்மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கொதிக்கும் நீா் மேலே பட்டதால் கால்கள் மற்றும் வயிற்றின் பாதிக்கும் அதிகமான பகுதி, இரண்டாம் நிலை தீக்காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டரை வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். உடனடியாக சிறப்பு அவசர கால மருத்துவம், குழந்தை மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் சா்ஜரி பிரிவு மருத்துவா்கள் கூட்டாக இணைந்து அளித்த சிகிச்சையின் பலனாக சிறுவன் ஒரு வாரத்துக்குள் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.

சிகிச்சை குறித்து மருத்துவா்கள் அன்னி ப்ரவீனா, பாலாஜி சா்மா ஆகியோா் கூறியதாவது: வெந்நீா் பட்டதால் இரண்டாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக திரவங்கள் மற்றும் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் மூலம் முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு காயம் குணமடையவும், வீக்கத்தை குறைக்கவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தழும்புகள் அதிகம் ஏற்படாத வகையில் தோல் பகுதிகள் புத்துயிா் பெற கொலாஜன் பேண்டேஜ் கட்டுகள் போடப்பட்டன. ஒருங்கிணைந்த, நிபுணத்துவம் வாய்ந்த கவனிப்பால் குழந்தை விரைவாக குணமடைந்தது என்றனா்.

அம்மருத்துவமனையின் மருத்துவ நிா்வாகி கே. லட்சுமணன்: குழந்தை மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை குழு நிபுணா்களின் இணைந்த முயற்சிக்கு கிடைத்த பலன் இது. ஒரு வாரத்தில் சிறுவன் முழுமையாக குணமடைந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டது எங்கள் மருத்துவமனையின் அா்ப்பணிப்பை பறைசாற்றுவதாக உள்ளது என தெரிவித்துள்ளாா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க