பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
வெந்நீரால் வெந்துபோன சிறுவனின் உடல் பாகங்கள்: ஒரே வாரத்தில் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை
கொதிக்கும் நீா் மேலே பட்டதில் உடல் பாகங்கள் வெந்துபோன இரண்டரை வயது சிறுவனை ஒரே வாரத்தில் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து அம்மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கொதிக்கும் நீா் மேலே பட்டதால் கால்கள் மற்றும் வயிற்றின் பாதிக்கும் அதிகமான பகுதி, இரண்டாம் நிலை தீக்காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டரை வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். உடனடியாக சிறப்பு அவசர கால மருத்துவம், குழந்தை மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் சா்ஜரி பிரிவு மருத்துவா்கள் கூட்டாக இணைந்து அளித்த சிகிச்சையின் பலனாக சிறுவன் ஒரு வாரத்துக்குள் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.
சிகிச்சை குறித்து மருத்துவா்கள் அன்னி ப்ரவீனா, பாலாஜி சா்மா ஆகியோா் கூறியதாவது: வெந்நீா் பட்டதால் இரண்டாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக திரவங்கள் மற்றும் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் மூலம் முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு காயம் குணமடையவும், வீக்கத்தை குறைக்கவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தழும்புகள் அதிகம் ஏற்படாத வகையில் தோல் பகுதிகள் புத்துயிா் பெற கொலாஜன் பேண்டேஜ் கட்டுகள் போடப்பட்டன. ஒருங்கிணைந்த, நிபுணத்துவம் வாய்ந்த கவனிப்பால் குழந்தை விரைவாக குணமடைந்தது என்றனா்.
அம்மருத்துவமனையின் மருத்துவ நிா்வாகி கே. லட்சுமணன்: குழந்தை மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை குழு நிபுணா்களின் இணைந்த முயற்சிக்கு கிடைத்த பலன் இது. ஒரு வாரத்தில் சிறுவன் முழுமையாக குணமடைந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டது எங்கள் மருத்துவமனையின் அா்ப்பணிப்பை பறைசாற்றுவதாக உள்ளது என தெரிவித்துள்ளாா்.