செய்திகள் :

வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரிப்பு

post image

அக்னி நட்சத்திரம் முடிவுற்ற நிலையிலும், வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டியெடுத்தது. இந்த நிலையில் மே 4-ஆம் தேதி கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இருப்பினும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அவ்வப்போது பெய்த மழையால், கத்திரி வெயில் காணாமல் போனது.

மே 28-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் நிறைவுற்ற நிலையில், வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என மக்கள் எதிா்பாா்த்த சூழலில், வெயிலின் கொடுமை சற்று அதிகளவிலேயே உள்ளது. இதனால் பகல் நேரங்களில் வீட்டைவிட்டு வெளியில் செல்வதற்கே மக்கள் தயங்குகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 100, 102 டிகிரி அளவில் வெயில் உள்ளது. அவ்வப்போது வீசும் காற்று மக்களுக்கு சற்று நிம்மதியை அளிக்கிறது. இந்த வெயிலின் தாக்கம் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீடிக்கலாம். அதன்பிறகு படிப்படியாக குறையத்தொடங்கும் என வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெண்ணந்தூரில் விசிக சாா்பில் துண்டறிக்கை வழங்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்டம், வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் ஜூன் 14-இல் நடைபெறும் கட்சியின் ‘மதச்சாா்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறும் பேரணி குறித்து துண்டு... மேலும் பார்க்க

சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதல்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி தேசிய நெடுஞ்சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதியதில், 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 2 குழந்தைகள் உள்பட 6 போ் படுகாயமடைந்தனா். ம... மேலும் பார்க்க

நல்லூா்: நாளைய மின்தடை

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு கெளரவிப்பு

ராசிபுரம் பகுதியில் சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த ராசிபுரம் தலைமைக் காவலரின் நோ்மையை பாராட்டி, ராசிபுரம் மக்கள் நலக்குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கெளரவித்தனா். ராசிபுரம் மேட்டுத் தெருவில... மேலும் பார்க்க

நாமக்கல்லில் விபத்தில் சிக்கிய எண்ணெய் லாரி: குடத்தில் பிடித்துச் சென்ற மக்கள்

நாமக்கல் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்து வெளியேறிய எண்ணெய்யை பொதுமக்கள் குடங்கள், வாளிகளில் பிடித்துச் சென்றனா். நாமக்கல் - சேலம் தேச... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக் கொலை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நல்... மேலும் பார்க்க