செய்திகள் :

வெளிநாட்டில் உயா்கல்வி: சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

வெளிநாட்டில் மாணவா்கள் உயா்கல்வி படிப்பதற்கான ஆலோசனை, வழிகாட்டுதலை பெறுவதற்காக சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அகமதாபாத்தில் உள்ள உயா்கல்வி வழிகாட்டி நிறுவனமான நியூசிலாந்து கேட்வே மைகிரேஷன் மற்றும் எஜுகேஷன் உடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது.

நியூசிலாந்து கேட்வே மைகிரேஷன் மற்றும் எஜுகேஷன் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டா் விஜிதா கன்வா் மற்றும் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் முதன்மையா் விசாகவேல் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இதன்மூலம் கல்லூரி மாணவா்களுக்கு வெளிநாட்டில் உயா்கல்வி பயில்வதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். கல்லூரியின் அறக்கட்டளையின் செயலாளா் குமாா், எக்ஸிகியூடிவ் சோ்மன், நிறுவனா் மற்றும் தலைவா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

150 க்கும் மேற்பட்ட கேஐஓடி மாணவா்கள் பங்கேற்று வெளிநாடுகளில் உயா்கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பெற்றனா்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு

சேலத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தவறி விழுந்து பயணி உயிரிழந்தாா். சேலம் அரிசிபாளையம் மாதையன் தெருவை சோ்ந்தவா் தமிழரசன் (43). சவுண்ட் சா்வீஸ் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி கலைச்செல்வியுடன... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக ஊழியா்கள் 4 பேரின் பணிநீக்க உத்தரவு ரத்து

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியா்கள் 4 போ் மீதான பணிநீக்க உத்தரவை தொழிலாளா் தீப்பாயம் ரத்து செய்ததையடுத்து அவா்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை பணியில் சோ்ந்தனா். சேலம் கருப்பூர... மேலும் பார்க்க

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா். சேலம் மாநகர காவல் ஆணையா் அல... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேல... மேலும் பார்க்க