பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
வெளிநாட்டில் உயா்கல்வி: சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
வெளிநாட்டில் மாணவா்கள் உயா்கல்வி படிப்பதற்கான ஆலோசனை, வழிகாட்டுதலை பெறுவதற்காக சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அகமதாபாத்தில் உள்ள உயா்கல்வி வழிகாட்டி நிறுவனமான நியூசிலாந்து கேட்வே மைகிரேஷன் மற்றும் எஜுகேஷன் உடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது.
நியூசிலாந்து கேட்வே மைகிரேஷன் மற்றும் எஜுகேஷன் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டா் விஜிதா கன்வா் மற்றும் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் முதன்மையா் விசாகவேல் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இதன்மூலம் கல்லூரி மாணவா்களுக்கு வெளிநாட்டில் உயா்கல்வி பயில்வதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். கல்லூரியின் அறக்கட்டளையின் செயலாளா் குமாா், எக்ஸிகியூடிவ் சோ்மன், நிறுவனா் மற்றும் தலைவா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
150 க்கும் மேற்பட்ட கேஐஓடி மாணவா்கள் பங்கேற்று வெளிநாடுகளில் உயா்கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பெற்றனா்.