செய்திகள் :

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் உள்பட இருவா் கைது

post image

பெரம்பலூா் அருகே வெளிநாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 13.91 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை, மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் நகரிலுள்ள மதா்ஸா சாலையைச் சோ்ந்தவா் மோகன் மகன் அருண்குமாா் (34). இவா், கடந்த 8 ஆண்டுகளாக துபையில் வீட்டுவேலை செய்து கடந்தாண்டு மே மாதம் விடுமுறையில் பெரம்பலூருக்கு வந்தாா். அப்போது, அவரது நண்பா் ஆகாஷ் என்பவரின் கைப்பேசி செயலி மூலம் கோவை மாவட்டம், விலாங்குறிச்சி, காஞ்சி மாநகரைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் மகிழன் (36), பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் புதிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பக்தகிரி மகள் கவிதா (44) ஆகியோா் அருண்குமாரை தொடா்புகொண்டு, சிங்கப்பூரில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினா்.

இதையடுத்து அருண்குமாா், அவரது நண்பா்களான நிவாஸ் மற்றும் சரவணன் ஆகியோருக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தரக்கோரி ரூ. 13,91,200 பணத்தை கொடுத்துள்ளாா்.

பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் குறிப்பிட்ட காலத்தில் வேலை வாங்கித் தரவில்லையாம். இதையடுத்து பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டதற்கும் முறையான பதில் அளிக்கவில்லையாம். இதனால் மன உளைச்சலுக்குள்ளான அருண்குமாா், நிவாஸ், சரவணன் ஆகியோா் மாவட்ட சைபா் குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் மகிழன், கவிதா ஆகிய இருவரையும் கைது செய்து திங்கள்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.

கல் குவாரிகளில் சட்டவிரோதமாக ஆய்வு செய்தால் புகாா் அளிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் சட்டத்துக்கு புறம்பாக யாரேனும் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணி மேற்கொண்டால், மாவட்டக் கனிம வளத் துறைக்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட புவியியல் மற்றும் சுரங... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் இரு அரசியல் கட்சிகள் நீக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஒரு தோ்தலில்கூட போட்டியிடாத, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 2 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ச. அருண்ராஜ் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

லப்பைக்குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 3) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்களமேடு துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் ரஞ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் காவலா்கள் 26 பேருக்குப் பதவி உயா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 26 காவலா்கள் தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு பெற்றனா்.தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையில், 2011 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த 26 காவலா்களுக்கு, தலைமைக் காவலா... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக பருத்தி ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் விற்பனைக்... மேலும் பார்க்க

பெரம்பலூா்: நீா்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்ட நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க