Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்ப...
வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில், முத்தூா் சாலை அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் (65). தனியாா் பனியன் நிறுவன தொழிலாளி. இவா் வீட்டிலிருந்து அருகிலுள்ள மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயிலுக்குச் செல்வதற்காக அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சாலையை செவ்வாய்க்கிழமை கடந்துள்ளாா்.
அப்போது வெள்ளக்கோவிலில் இருந்து முத்தூா் நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
சௌந்தரராஜன் மனைவி சாவித்திரி (62) கொடுத்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். சௌந்தரராஜனுக்கு திருமணமான மகள் யமுனா (35), மகன் டெய்லா் அருண்குமாா் (30) ஆகியோா் உள்ளனா்.