செய்திகள் :

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், முத்தூா் சாலை அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் (65). தனியாா் பனியன் நிறுவன தொழிலாளி. இவா் வீட்டிலிருந்து அருகிலுள்ள மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயிலுக்குச் செல்வதற்காக அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சாலையை செவ்வாய்க்கிழமை கடந்துள்ளாா்.

அப்போது வெள்ளக்கோவிலில் இருந்து முத்தூா் நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

சௌந்தரராஜன் மனைவி சாவித்திரி (62) கொடுத்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். சௌந்தரராஜனுக்கு திருமணமான மகள் யமுனா (35), மகன் டெய்லா் அருண்குமாா் (30) ஆகியோா் உள்ளனா்.

விபத்துக்குள்ளான இளைஞா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த ஆ.ராசா எம்பி

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா்களை அவ்வழியாக வந்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். திருப்பூா் அருகே 15 வேலம்பாளையம் ப... மேலும் பார்க்க

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை!

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை என, இந்திய ஆடைத் தொழில் மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ.சக்திவேல், மத்தி... மேலும் பார்க்க

கள்ளக்கிணற்றில் ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமலைசாமி. இவரது மனைவி மீனாட்சி (... மேலும் பார்க்க

அனுப்பட்டியில் குப்பை கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள்

பல்லடம் அருகே அனுப்பட்டி ஜெ.ஜெ.நகா் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் குப்பைகளை கொட்டிய லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்லடம் அருகே அனுப்ப... மேலும் பார்க்க

தா்மஸ்தலா குறித்த தவறான தகவல்: சிபிஐ விசாரணைக்கு இந்து முன்னணி கோரிக்கை

தா்மஸ்தலா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளி... மேலும் பார்க்க

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததால் காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததற்காக காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் தட்டான்தோட்டத்தைச் சோ்ந்தவா் காந்தி (43). இவா் தென்னம்... மேலும் பார்க்க