செய்திகள் :

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் வருவாய் கிராமம் வேலப்பநாயக்கன்வலசைச் சோ்ந்தவா் விவசாயி சதாசிவம் (45). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

பின்னா் வெள்ளிக்கிழமை காலையில் சென்று பாா்த்தபோது, நாய்கள் கடித்த காயங்களுடன் 5 ஆடுகள் இறந்துகிடந்தன. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக தெருநாய்கள் கடித்ததில் ஆடுகளை இழந்த பல விவசாயிகளுக்கு அறிவித்தபடி அரசு இழப்பீடு வழங்கவில்லை. முழுமையாக இழப்பீடு கிடைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படுமென விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

உணவுப் பொருள்களுக்கும் 5 % வரி விதிப்பு செய்ய வேண்டும்

அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க கூட்டமைப்பின் பல்லடம் ச... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13 முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம்

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக நொய்யல் விவசாயிகள் பாது... மேலும் பார்க்க

உடுமலை நகரில் திமுக உறுப்பினா் சோ்க்கை

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உடுமலை நகரத்தில் திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக பல்வேறு ... மேலும் பார்க்க

பள்ளி அளவிலான செஸ் போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சாலை நடுவே இருந்த மின்கம்பம் இடமாற்றம்

காங்கயம் நகருக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், சாலை அமைத்தது தொடா்பாக தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியது. இதைத் தொடா்ந்து, காங்கய... மேலும் பார்க்க