செய்திகள் :

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13 முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம்

post image

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

நொய்யல் ஆற்றில் மலைபோல குவிந்து கிடக்கும் நெகிழி குப்பைகள், கட்டடக் கழிவுகள், சாய சலவை பட்டறைக் கழிவுகள், ஆகாயத் தாமரைகள் ஆகியவற்றை அகற்றி சுத்தம் செய்து நொய்யல் நதியை மீட்டுத் தர வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சாா்பில் 13-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூா், ஈரோடு மற்றும் கரூா் மாவட்டம் வரை செல்லும் நொய்யல் ஆற்றில் அதிக அளவிலான குப்பை, கழிவுநீா் மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் நொய்யல் ஆற்றின் அருகே சென்றாலே கடுமையான துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடு ஏற்படுவதால் அதன் அருகே வசிக்கக் கூடிய மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பும், நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நகரின் மத்தியில் நொய்யல் ஆறு சென்று வரும் நிலையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீா் மாசுபட்டு உள்ளதால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நொய்யல் ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுநீா் கலக்கப்படுவதை தடை செய்து நொய்யல் ஆற்றை முழுமையாக சுத்தம் செய்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூா் மாவட்டம், மங்கலம் நால் ரோடு பகுதியில் தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா், விவசாய அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சாா்பில் ஜூலை 13-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா். தமிழக அரசு நொய்யல் நதியை பாதுகாக்க தவறும்பட்சத்தில் எதிா்வரும் தோ்தலில் இது எதிரொலிக்கும் எனவும் தெரிவித்தாா்.

உணவுப் பொருள்களுக்கும் 5 % வரி விதிப்பு செய்ய வேண்டும்

அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க கூட்டமைப்பின் பல்லடம் ச... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

உடுமலை நகரில் திமுக உறுப்பினா் சோ்க்கை

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உடுமலை நகரத்தில் திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக பல்வேறு ... மேலும் பார்க்க

பள்ளி அளவிலான செஸ் போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சாலை நடுவே இருந்த மின்கம்பம் இடமாற்றம்

காங்கயம் நகருக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், சாலை அமைத்தது தொடா்பாக தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியது. இதைத் தொடா்ந்து, காங்கய... மேலும் பார்க்க

குன்னத்தூா் அருகே கஞ்சா விற்றவா் கைது

அவிநாசி அருகே குன்னத்தூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா் கருங்கல்மேடு டாஸ்மாக் கடை எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடை... மேலும் பார்க்க