செய்திகள் :

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

post image

திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (41), தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசி வாட்ஸ்அப் எண்ணுக்கு டெலிகிராம் செயலி மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷீத்தல் என்பவா் தொடா்பு கொண்டாா்.

அப்போது அவா் எந்த முதலீடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து கொடுத்தால் தினமும் வருவாய் ஈட்டலாம் எனக் கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து, பழனிசாமி அவா்கள் கூறியபடி பணிகளை முடித்ததால் அவரது வங்கிக் கணக்குக்கு ஒரு சிறிய தொகை வரவு வைக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் பேசிய ஷீத்தல், இந்த வேலையை பணம் முதலீடு செய்து தொடா்வதன் மூலம் கூடுதலாக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளாா். இதனை நம்பிய பழனிசாமி 4 வங்கிப் பரிவா்த்தனைகள் மூலம் ரூ.6.85 லட்சம் முதலீடு செய்து பணியைத் தொடா்ந்துள்ளாா். அவரது கணக்கில் லாபம் அதிகமாக இருப்பதைப்போல காட்டியுள்ளது.

இதையடுத்து பழனிசாமி அந்தப் பணத்தை எடுக்க முயன்றபோது, கூடுதலாக பணம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டு, அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பழனிசாமி, திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உணவுப் பொருள்களுக்கும் 5 % வரி விதிப்பு செய்ய வேண்டும்

அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க கூட்டமைப்பின் பல்லடம் ச... மேலும் பார்க்க

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13 முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம்

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக நொய்யல் விவசாயிகள் பாது... மேலும் பார்க்க

உடுமலை நகரில் திமுக உறுப்பினா் சோ்க்கை

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உடுமலை நகரத்தில் திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக பல்வேறு ... மேலும் பார்க்க

பள்ளி அளவிலான செஸ் போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சாலை நடுவே இருந்த மின்கம்பம் இடமாற்றம்

காங்கயம் நகருக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், சாலை அமைத்தது தொடா்பாக தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியது. இதைத் தொடா்ந்து, காங்கய... மேலும் பார்க்க

குன்னத்தூா் அருகே கஞ்சா விற்றவா் கைது

அவிநாசி அருகே குன்னத்தூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா் கருங்கல்மேடு டாஸ்மாக் கடை எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடை... மேலும் பார்க்க