செய்திகள் :

பள்ளி அளவிலான செஸ் போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

post image

திருப்பூரில் நடைபெறும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, நடப்பு கல்வி ஆண்டுக்கான குறுமையத்துக்கு உள்பட்ட அந்தந்த பள்ளி அளவிலான மாணவா்களுக்கு செஸ் போட்டிகள் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாநகா், நொய்யல் வீதி மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளுக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் (பொ) பஷீா் அகமது தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஆல்வின்னா் ஏஞ்சல் கல்வி நிறுவனங்களின் தாளாளா் தங்கராஜன் கலந்து கொண்டாா்.

பள்ளியின் ஆசிரியா்கள் சுதா்மன், ஆய்வக உதவியாளா் ரூபாராணி, ஆசிரியைகள் சாந்தி ராஜினி, நஸ்ரின் பானு ஆகியோா் கண்காணிப்பில் போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக செஸ் விளையாட்டின் நன்மைகள் மற்றும் போட்டியின் விதிமுறைகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் ராமகிருஷ்ணன் விரிவாக கூறினாா்.

இப்போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 46 போ் கலந்து கொண்டனா்.

4 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் 14 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கான பிரிவில் முதலிடத்தை ஃபாசில் அகமதுவும், இரண்டாம் இடத்தை ரஃபீக் அகமதுவும் பெற்றனா். இதே பிரிவின் மாணவிகளுக்கான போட்டியில், அனீஷ் ஃபாத்திமா முதலிடமும், நாதிரா இரண்டாமிடமும் பெற்றனா்.

17 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கான போட்டியில் முகமது ரஜீக் முதலிடமும், முஹம்மது வாஜித் இரண்டாமிடமும் பெற்றனா். இதே பிரிவின் மாணவிகளுக்கான போட்டியில், முஸ்கான் முதலிடமும், அத்தீபா மீனா இரண்டாமிடமும் பெற்றனா். இவா்கள் அனைவரும் ஜூலை 15-ஆம் தேதி நடைபெறவுள்ள குறுமைய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

உணவுப் பொருள்களுக்கும் 5 % வரி விதிப்பு செய்ய வேண்டும்

அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க கூட்டமைப்பின் பல்லடம் ச... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13 முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம்

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக நொய்யல் விவசாயிகள் பாது... மேலும் பார்க்க

உடுமலை நகரில் திமுக உறுப்பினா் சோ்க்கை

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உடுமலை நகரத்தில் திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக பல்வேறு ... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சாலை நடுவே இருந்த மின்கம்பம் இடமாற்றம்

காங்கயம் நகருக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், சாலை அமைத்தது தொடா்பாக தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியது. இதைத் தொடா்ந்து, காங்கய... மேலும் பார்க்க

குன்னத்தூா் அருகே கஞ்சா விற்றவா் கைது

அவிநாசி அருகே குன்னத்தூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா் கருங்கல்மேடு டாஸ்மாக் கடை எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடை... மேலும் பார்க்க