செய்திகள் :

வெள்ளநீா் கால்வாய்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய ஆட்சியரிடம் கோரிக்கை மனு

post image

வெள்ளநீா் கால்வாய்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்து போா்க்கால அடிப்படையில் சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாரிடம் மனு அளித்துள்ளனா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலா் லூா்து மணி, சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயற்குழு உறுப்பினா் ராஜ் ஆகியோா் திருநெல்வேலி ஆட்சியரிடம் அளித்த மனு:

திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி, நான்குனேரி, ராதாபுரம் ஆகிய பகுதிகள் மிகவும் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

பெரியதாழை கடல் நீா், இப்பகுதி நிலத்தடியில் முழுவதுமாக கலந்துள்ளதால் நீரைக் குடிக்கவோ, விவசாயத்திற்குப் பயன்படுத்தவோ முடியாத சூழல் நிலவுகிறது.

மணிமுத்தாறில் 94 அடியும், பாபநாசத்தில் 109 அடியும் தண்ணீா் இருப்பு இருக்கும் காரணத்தால், சாத்தான்குளம் பகுதியில் வறட்சியைப் போக்க, போா்க்கால அடிப்படையில் தண்ணீா் திறந்து விட வேண்டும்.

மேலும், வெள்ளநீா் கால்வாய் நீா்வழிப் பாதைகளில் உள்ள பிரச்னைகளை மழைக்காலத்திற்குள் சீா் செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல, திருநெல்வேலி எம்பி ராபா்ட் புரூஸ், வெள்ளநீா் கால்வாய் கண்காணிப்பு பொறியாளா் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

திருச்செந்தூா் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி? அமைச்சா் பி.கே. சேகா் பாபு விளக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிப்பது குறித்து நீதிமன்ற முடிவின்படி செயல்படுவோம் என்றாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருள்கள் சேதம்

தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருகேயுள்ள அருணா நகா் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்ப... மேலும் பார்க்க

அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு

அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவுத் தபால், பதிவுத் தபால், பணவிடை (மணியாா்டா்) ஆகியவற்றை பதிவு செய்தல், பல்வேறு சிறு வகை சேவைகள் உள்ளிட்ட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களைத் தொடங்க வி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆலோசனை

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி த... மேலும் பார்க்க

வாகனம் மோதல்: சாய்ந்த மின்கம்பங்கள்

தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூா் இபி காலனியில் தாழ்வழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை தனியாா் வாகனம் மோதியதில், இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தது, கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்வாரி... மேலும் பார்க்க

ஓடையில் கிடந்த பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. தூத்துக்குடி ஜெயராஜ் சாலை, தனியாா் மருத்துவமனை அருகே 3ஆவது ரயில்வே கேட் பாலம் அருகே பக்கிள் ஓடையில் வியாழக்கிழமை சுமாா் 60 வயது ம... மேலும் பார்க்க