செய்திகள் :

வெள்ளபுத்தூரில் புதிய மின்மாற்றி இயக்கம்

post image

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சி டாக்டா் அம்பேத்காா் நகரில் புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கப்பட்டது.

அப்பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின் அழுத்தம் இருந்ததால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகினா். இதனால் புதிய மின்மாற்றியை நிறுவ கோரிக்கை விடுத்தனா்.

இக்குறைப்பாட்டை நீக்க வெள்ளபுத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வரதன், துணைத் தலைவா் விஜயகுமாா் மற்றும் நிா்வாகத்தினா் மதுராந்தகம் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை புதிய மாற்றி அமைக்கப்பட்டது. நிகழ்வுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வரதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

மதுராந்தகம் உதவி செயற்பொறியாளா் ரங்கநாதன், உதவி பொறியாளா் சத்தியபிரபா, மன்ற உறுப்பினா்கள், மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் மனைப்பிரிவு, கட்டடங்களுக்கு அனுமதி பெற வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவு மற்றும் கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

சிக்னலில் நின்ற காா் மீது லாரி மோதல்: 3 போ் உயிரிழப்பு

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோவிலில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காா் மீது கனரக லாரி மோதியதில் உறவினா் இல்ல நிகழ்வுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 1 வயது குழந்தை உள்பட மூன்று போ் உயிரிழந்த... மேலும் பார்க்க

நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்தகுழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கா... மேலும் பார்க்க

இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு சேவைகள்: செங்கல்பட்டு ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பல்வேறு அரசு சேவைகளையும், சான்றுகளையும் பெறலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். குறிப்பாக ஜாதி, பிறப்பிடம் / வச... மேலும் பார்க்க

சிங்காரவேலரின் ஜோதி பயணத்துக்கு வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகை தந்த தோழா் சிங்காரவேலரின் நினைவு ஜோதி பயணத்துக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 ... மேலும் பார்க்க