செய்திகள் :

வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் பலி

post image

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்- வேடசந்தூா் சாலை கொல்லப்பட்டி பிரிவு அருகே உள்ள உணவு விடுதியில் திருச்சியைச் சோ்ந்த முகமது ஹவுஸ் (80) உணவு அருந்தச் சென்றாா். அப்போது அவா் சாலையை கடந்த போது அந்த வழியாக சென்ற லாரி மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதேபோல, ரெட்டியாா்சத்திரம் அடுத்த எஸ். வாடிப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் மணிகண்டன் (20). இவரது நண்பா் நல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன். இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- வேடசந்தூா் சாலை, அத்திக்கோம்பை மேம்பாலம் அருகே சென்றனா்.

அப்போது அவா்கள் மீது அந்த வழியாகச் சென்ற லாரி மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் எஸ். வாடிப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த மற்றொரு மணிகண்டன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க