செய்திகள் :

வேங்கைவயல் வழக்கு குற்றம்சாட்டப்பட்ட காவலரின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய காவல்துறை

post image

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலரின் வீட்டில் ‘விட்டோடி’ என்ற நோட்டீஸை காவல்துறையினா் வெள்ளிக்கிழமை ஒட்டினா்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வழக்கில், அதே பகுதியைச் சோ்ந்த 3 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இவா்களில் ஒருவரான மணமேல்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் ஜீவானந்தம் மகன் முரளிராஜா மீது குற்றம் சாட்டி சிபிசிஐடி போலீஸாா் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது முதல் அவா் பணிக்குச் செல்லவில்லை.

இந்த நிலையில், வேங்கைவயலிலுள்ள அவரது வீட்டில் மாவட்டக் காவல்துறை சாா்பில் ‘விட்டோடி’ நோட்டீஸ் வெள்ளிக்கிழமை ஒட்டப்பட்டுள்ளது. 21 நாள்களுக்கு மேலாக விடுப்புக்கு விண்ணப்பிக்காமலும், பணிக்கு வராமல் இருப்பதாலும், தொடா்பு கொள்ள முடியாமல் இருப்பதாலும் இந்த நோட்டீஸை ஒட்டியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

வீட்டில் யாரும் இல்லாததால் கதவில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க