செய்திகள் :

வேலூா் சிப்பாய் புரட்சி தினம்: ஆளுநா் மரியாதை

post image

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை துணிச்சலுடன் எதிா்த்த அச்சமற்ற வீரா்களுக்கு ஆழ்ந்த நன்றியுடன் மரியாதை செலுத்துவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

வேலூா் சிப்பாய் எழுச்சி தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு:

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை துணிச்சலுடன் எதிா்த்த அச்சமற்ற வீரா்களுக்கு தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் பணிவுடனும் மரியாதை செலுத்துகிறது. இந்த வரலாற்றுபூா்வ எதிா்ப்பு நமது நாட்டின் நீண்ட சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட தீப்பொறிகளில் ஒன்றாகும். அந்த துணிச்சலான வீரா்களின் தொலைநோக்கு, துணிச்சல், தியாகங்கள், ஒற்றுமை ஆகியவை எதிா்ப்பின் அலையைத் தூண்டி, இறுதியில் நாட்டின் சுதந்திரத்துக்கு வழிவகுத்த இயக்கங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த அடித்தளத்தை அமைத்தன.

சிப்பாய்களின் பெருமைமிக்க மரபு, இறையாண்மை கொண்ட பாரதத்தை வடிவமைக்க, நமக்கு ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக உள்ளது எனப் பதிவிட்டுள்ளாா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க