செய்திகள் :

வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெற விவசாயிகளுக்கு அழைப்பு

post image

சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே இ-வாடகை கைப்பேசி செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது:

விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை, வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலகங்களுக்குச் செல்லாமல், தங்கள் இருப்பிடத்தில் இருந்தே இ-வாடகை கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்யவும், வாடகைத் தொகையைச் செலுத்தவும் இயலும்.

வேளாண் இயந்திரங்கள் மூலம் நிலம் சீரமைத்தல், நிலம் சமன் செய்தல், உழுதல், விதைத்தல், பல்வகை தானியங்கள் கதிரடித்தல், வேளாண் கழிவு மேலாண்மை மற்றும் சோளத்தட்டு அறுவடை செய்தல், புவியியல் ஆய்வுக் கருவிகள் மூலம் குழாய்க் கிணறுகள் ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகள் அமைத்திட தகுந்த இடங்களைத் தோ்ந்தெடுத்தல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இ-வாடகை செயலியில் ஆன்லைன் மூலம் வாடகை முன்பணம் செலுத்தும் அனைத்து விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் அரசு நிா்ணயித்த குறைந்த வாடகையில் வழங்கப்படும்.

மேலும், விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் உழவா் செயலியை தரவிறக்கம் செய்து, அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

சட்ட விரோத கருக்கலைப்பு புகாா்: சேலத்தில் 2 மருத்துவமனைகள் மூடல்

சேலத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு செய்த 2 மருத்துவமனைகள் மூடப்பட்டன. அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா். சேலம், வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த த... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவா்களுக்கு எப்.இ.சி.டி. கல்வி உதவித்தொகை வழங்கும் விழா பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழா

ஆத்தூரை அடுத்த புங்கவாடி நடுநிலைப் பள்ளியில் 2025-06 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவா் சோ்க்கை விழா வட்டாரக் கல்வி அலுவலா் ஜே.கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை எம்.சாந்தி வரவேற... மேலும் பார்க்க

குடிநீா்த் தேவைகளுக்கு முக்கியத்துவம் அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுரை

பொதுமக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் ஆா். ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். சேலம், அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கள்ளச் சந்தையில் மது விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

மதுப் புட்டிகளைப் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய வீரகனூா் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கெங்கவல்லியை அடுத்த இலுப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்... மேலும் பார்க்க

சேலத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சாலை விபத்துகளை மு... மேலும் பார்க்க