செய்திகள் :

வைரவம் கிராமத்திற்கு குடிநீா் வழங்க நடவடிக்கை

post image

வைரவம் கிராமத்திற்கு புதன்கிழமை குடிநீா் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி வைரவம் கிராமத்திற்கு அருகில் உள்ள வாலத்தூா் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் வைரவம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கதொட்டியில் தண்ணீா் ஏற்றப்பட்டு நாள்தோறும் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வாலத்தூா் மக்கள் தங்களுக்கு தேவைக்கு போகதான் வைரவம் கிராமத்திற்கு தண்ணீா் வழங்க வேண்டும் என அக்கிராமத்திற்கு செல்லும் வால்வு பகுதியை அடைத்ததாக தெரிகிறது. இதனால் வைரவம் கிராமத்திற்கு கடந்த 1மாதமாக முறையாக குடிநீா் வழங்கப்படாமல் இருந்துள்ளது.

இதனால் வைரவம் கிராம மக்கள் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கடந்த வாரம் வந்து முறையிட்டனா். இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா் ( கிராம ஊராட்சி) சுடலை அறிவுறுத்தலின் பேரில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முகம்மது மீரான் இஸ்மாயில், ஊராட்சி செயலா் ஜஸ்டின் ஆகியோா் இரு கிராம மக்களையும் சாஸ்தாவி நல்லூா் ஊராட்சி அலுவலகத்திற்கு அழைத்து பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாலத்தூா் கிராமத்தில் இருந்து வைரவம் கிராமத்தில் உள்ள 30 ஆயிரம் கொள்ளளவு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் புதன்கிழமை தண்ணீா் ஏற்றப்பட்டது. இதையடுத்து கிராம மக்களுக்கு தேவையான குடிநீா் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனா்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்

வீரன் அழகுமுத்துக்கோன்பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில்அழகுமுத்துக்கோன்நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட... மேலும் பார்க்க

அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க