செய்திகள் :

ஷிகான் ஹுசைனியைப் பாதித்த ஏபிளாஸ்டிக் அனீமியா என்பது?

post image

கராத்தே கலையில் புகழ்பெற்ற ஷிகான் ஹுசைனி ரத்தப் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

கராத்தே கலையில் பெயர் பெற்றவரும் வில் வித்தையிலும் தேர்ச்சி பெற்று, உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு சாதனைகளை படைத்தவர் ஷிகான் ஹுசைனி.

திரைப்பட நடிகரும் கூட. தமிழ் நாடு 'வில்' வித்தை சங்கத்தை ஆரம்பித்து அதன் பொது செயலராகவும் இருந்தவர். பல்வேறு பொறுப்புகளை ஏற்று, நாட்டில் கராத்தே கலையை பல்வேறு தரப்பினருக்கும் பரப்பி வருகிறார்.

இவருக்கு ஏற்பட்ட ஏபிளாஸ்டிக் அனீமியா, ரத்தப் புற்றுநோயாக மாறி இவரது வாழ்நாள் எண்ணப்பட்டு வருவதாக சில ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணல் மூலம் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது.

இவர் தமிழக துணை முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு ஊடகங்கள் வாயிலாக கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்த நிலையில்தான், இவருக்கு ஏற்பட்ட ஏபிளாஸ்டிக் அனீமியா பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நோய்க்கு ஹைபோபிளாஸ்டிக் அனீமியா, போன் மார்ரோ ஃபெய்லியர் என்றும் அழைக்கப்படுகிறது.

போன் மார்ரோ எனப்படும் எலும்பு மஞ்ஜை போதிய அளவில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் நிலையே ஏபிளாஸ்டிக் அனீமியா. எலும்புக்குள் இருக்கும் மெல்லிய திசுப் பகுதியே எலும்பு மஞ்ஜை. இதுதான் ரத்த சிவப்பணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், ரத்த தட்டுக்களை உற்பத்தி செய்யும்.

ரத்த ஸ்டெம் செல்களில் ஏற்படும் சேதங்களால் ஏபிளாஸ்டிக் அனீமியா ஏற்படுகிறது. ஸ்டெம் செல்கள் என்பது எலும்பு மஞ்ஜையில் உள்ள முதிர்ச்சியடையாத செல்கள் ஆகும், அவை அனைத்து இரத்த அணு வகைகளையும் அதாவது சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ரத்த தட்டுகளையும் உருவாக்குகின்றன. ஆனால், ஸ்டெம் செல்களில் ஏற்படும் காயம் இந்த இரத்த அணு வகைகளின் உற்பத்தி குறைவதற்கு காரணமாகிறது.

இவை ஏற்படக் காரணங்கள்..

சில மருந்துகள், சில வேதிப்பொருள்களின் பயன்பாடு.

அணுக்கதிர் வீச்சுகள், கீமோதெரபி

நோயெதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு

கருவுற்றிருப்போருக்கு

சில நுண்ணுயிரி தொற்றுகள் காரணமாகின்றன. ஆனால், சில வேளைகளில் இதற்கு எந்த அடிப்படைக் காரணமும் கண்டறியப்படுவதில்லை. இந்த நேரங்களில் இதனை இடியோபாதிக் ஏபிளாஸ்டிக் அனீமியா என்கிறார்கள்.

ரயில்வே போர்வை உறையில் தமிழ்!

ரயில்வே பயணிகள் போர்வை உறைகளில் தமிழ் உள்பட 3 மொழிகளில் அச்சிட தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பு ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டுவந்த நிலையில், ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மார்ச் 17 முத... மேலும் பார்க்க

காவல் துறையை இனி தூங்கவிடமாட்டேன்: அண்ணாமலை

இன்று இரவு முதல் காவல் துறையை தூங்கவிடமாட்டேன் என்று கைதாகி விடுதலை செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்குச் சென்ற மாநில தலைவர் ... மேலும் பார்க்க

பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்: மயக்கமடைந்த பெண்ணால் பரபரப்பு!

பாஜகவினர் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தில் பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததையடுத்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பா... மேலும் பார்க்க

மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்பாரா? - எஸ். ரகுபதி

பிரதமர் மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா? என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழலுக்கு ஆதாரம் உள்ளதா? என்றும் கேள்வி எழ... மேலும் பார்க்க

பாஜக - திமுக மறைமுக கூட்டணி: தவெக

பாஜக - திமுக புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வெ... மேலும் பார்க்க