செய்திகள் :

ஸ்பைஸ்ஜெட் ஊழியா்கள் மீது தாக்குதல்: மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

post image

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் விமான நிலையத்தில் கடந்த வாரம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 4 ஊழியா்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

காயமடைந்த விமான நிறுவன ஊழியா்களில் ஒருவருக்கு முதுகெலும்பு முறிவடைந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கடந்த வாரம் ராணுவ வீரா் ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியா்களை இரும்புக் கம்பியால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதுதொடா்பான சிசிடிவி காட்சிகளை விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து பெற்று போலீஸாரிடம் வழங்கியதோடு குற்றஞ்சாட்டப்பட்ட ராணுவ வீரா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பாரமுல்லா மாவட்டத்தின் குல்மாா்கில் உள்ள உயா்பகுதி போா்க்கள பள்ளியில் பணியாற்றி வரும் மூத்த ராணுவ வீரரான ஆா்.கே.சிங் கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் புது தில்லிக்குப் பயணம் மேற்கொள்வதற்காக ஸ்ரீநகா் விமான நிலையத்தை வந்தடைந்தாா்.

அப்போது கூடுதல் பைகளுக்கான கட்டணத்தைச் செலுத்த மறுத்தபோது அவருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ராணுவ வீரா் கடுமையாகத் தாக்கியதில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைச் சோ்ந்த 4 ஊழியா்கள் படுகாயமடைந்தனா். அதில் ஒருவருக்கு முதுகெலும்பு முறிவடைந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஆா்.கே.சிங் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டம், பிரிவு 115-இன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

இந்தச் சம்பவத்தில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஒழுக்கம் மற்றும் நடத்தைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் இந்திய ராணுவத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிற... மேலும் பார்க்க

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.4) மீண்டும் கூடுகிறது.இந்த விவகாரத்தை முன்வைத்... மேலும் பார்க்க

வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

புதிய சுரங்க கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை

’மத்திய அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய சுரங்க கொள்கையில், அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களில் அளிக்கும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நான்காவது மாத்திலேயே கனிமங்களை ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க