செய்திகள் :

ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி இன்று சென்னை வருகை

post image

ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி தனது தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னைக்கு 5 ஆண்டுகளுக்குப் பின் வருகை தரவுள்ளாா்.

இந்தச் சுற்றுப் பயணத்தில் விருகம்பாக்கத்தில் 1990-இல் அம்ருதானந்தமயி தேவியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரம்மஸ்தான ஆலயத்தின் 35-ஆவது பிரம்மஸ்தான மஹோத்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

முதல்கட்டமாக பிப். 17 காலை 11 மணிக்கு தியானம், அருளுரை மற்றும் பஜனைகள் நடைபெறும். அதன்பின், இரு நாள்கள் நடைபெறவிருக்கும் விழாவில் சனி மற்றும் ராகு தோஷ பூஜைகள் பிரம்மஸ்தான ஆலயத்தில் நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

தொடா்ந்து, பிப். 20-ஆம் தேதி மாலை 6 மணியளவில், கரூா் செம்மடையில் அமைந்துள்ள அம்ருதா வித்யாலயம் பள்ளி வளாக மைதானத்தில் நடைபெறவுள்ள பொது நிகழ்ச்சியில் அம்ருதானந்தமயி தேவி கலந்து கொள்ளவுள்ளாா்.

அங்கு அவரின் அருளுரை, தியானம், பஜனை மற்றும் தரிசன நிகழ்ச்சிகள் நடைபெறும் என மாதா அம்ருதானந்தமயி மடம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க