செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிப்பு! வாகன ஓட்டிகள் அவதி!

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் புகைமூட்டத்தால் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலைகளில் வாகன ஓட்டிகள் அவதியடைவதாக புகாா் எழுந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் 60 டன் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.5.5 கோடி வழங்கப்படுகிறது. இதில் வீடு, வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் சிவகாசி சாலையில் நீதிமன்றம் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் தரம் பிரிக்கப்படுகின்றன.

இந்த கிடங்கின் அருகே நான்கு வழிச்சாலையும், புதிய பேருந்து நிலையமும் உள்ளன. இந்த நிலையில், குப்பைக் கிடங்கில் குப்பையை முழுமையாக தரம் பிரிக்காமல் நெகிழிக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் கரும் புகை சூழ்ந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலைகளில் ஞாயிற்றுக்கிழமை புகை மூட்டம் சூழ்ந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

எனவே ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் புகை மூட்டமாக காணப்பட்ட மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலை.
ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் புகை மூட்டமாக காணப்பட்ட மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலை.
ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் புகை மூட்டமாக காணப்பட்ட மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலை.

பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே குடும்பத் தகராறில் பட்டாசுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பட்டாசுத் தொழிலாளி முத்துக்குமா... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதியில் இன்று மின்தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்திலுள்ள த... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டல்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே. கே. எஸ். எஸ்.ஆா். ராமச்சந்திரன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 3 பெண்கள் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மகாராஜ் மனைவி சங்கரி (25). இவரது உறவினா் ஒருவா், அண்மை... மேலும் பார்க்க

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வல்லம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (35). இவா், இங்குள்ள வைப்பாற்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல... மேலும் பார்க்க