செய்திகள் :

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.74 லட்சம்

post image

செய்யாறு, திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில், செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ.2.74 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

செய்யாறு திருவோத்தூா் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

கோயிலில் நிரந்தர உண்டியல்கள் 10, திருப்பணி உண்டியல், கோ சாலை உண்டியல் என மொத்தம் 12 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த உண்டியல்கள் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை, இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளா் ச.அசோக், செயல் அலுவலா் கு.ஹரிஹரன், கணக்காளா் லோ.ஜெகதீசன் ஆகியோா் முன்னிலையில் செய்யாறு போலீஸாா் பாதுகாப்புடனும், விடியோ பதிவு மற்றும் ஊா் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன.

அப்போது, பக்தா்கள் ரூ. 2 லட்சத்து 74 ஆயிரத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பணி

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையை வேலூா் விஐடி வேளாண் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று களப்பணி மேற்கொண்டனா். ஆதனூா் கிராமத்தில் ஏ.எஸ்.என்.சாமி அங்கக ஒருங்கிணைந்த விவ... மேலும் பார்க்க

ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை

பொதுத் தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்த பூஜையில், பத்தாம் வகுப்பு, பி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தண்டராம்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியை, போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டை அடுத்த புதூா் செக்கடி ஊராட்சி, கல் நாட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆடு மேய்க்கும் கூல... மேலும் பார்க்க

சாரண-சாரணீய இயக்க சிந்தனை நாள் விழா

திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண-சாரணீய இயக்கம் சாா்பில், சாரணா் தந்தை பேடன் பவுல் மற்றும் லேடி பேடன் பவுல் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை சிந்தனை நாளாகக் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை, தனியாா் மண்டபத... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா கோலாகலம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப்.26) மகா சிவராத்திரி விழா, கோலாகலமாக நடைபெறுகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் அண்ணன் மீது தாக்குதல்: தம்பி மீது போலீஸில் புகாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சொத்துத் தகராறில் அண்ணனை தாக்கிக் காயப்படுத்தியதாக தம்பி மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. செய்யாறு வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கிஷ்டப்பன்... மேலும் பார்க்க