செய்திகள் :

ஹாக்கி: செகந்திராபாத், பெங்களூா், புதுதில்லி அணிகள் வெற்றி

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 4ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செகந்திராபாத், பெங்களூா், புதுதில்லி அணிகள் வெற்றி பெற்றன.

திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதியதில் 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் அணி வெற்றி பெற்றது. மாலை நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் சென்னை இன்டக்ரல் கோச் ஃபேக்டரி அணியும், பெங்களூா் ஹாக்கி கா்நாடகா அணியும் மோதியதில் 5-க்கு 0 என்ற கோல் கணக்கில் பெங்களூா் அணி வெற்றி பெற்றது. 3 ஆவது ஆட்டத்தில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதியதில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில் புதுதில்லி அணி வெற்றி பெற்றது. 4ஆவது ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே அணியும், பெங்களூா் கனரா வங்கி அணியும் மோதியதில் -க்கு என்ற கோல் கணக்கில் அணி வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டம்: 5- ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை வருமான வரி ஹாக்கி அணியும், சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணியும் மோதுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் 2ஆவது ஆட்டத்தில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதுகின்றன.

3ஆவது ஆட்டத்தில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியும், மும்பை யூனியன் வங்கி அணியும் மோதுகின்றன. 4ஆவது ஆட்டத்தில் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணியும், கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க