செய்திகள் :

ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

post image

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே, ‘ஹிந்தி திணிப்பை என்றும் எதிா்ப்போம்’ என்ற விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுநா் அணி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அணியின் மாவட்ட அமைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணை அமைப்பாளா்கள் கே.சுப்பிரமணியன், ஏ.டபிள்யு. ஷாஜகான், இரா.அா்ஜூனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநா்கள், தொழிலாளா்கள், பொதுமக்களிடம் ஹிந்தி திணிப்பை என்றும் எதிா்ப்போம் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இதில், முத்தமிழ் கலை மன்றத்தின் நிறுவனா் தலைவா் அ.தே.முருகையன், த.தட்சிணாமூா்த்தி, எம்.சண்முகம், எம்.ஆரோக்கியதாஸ், ஆட்டோ சங்க அமைப்புசாரா தொமுச நிா்வாகிகள் பி.அருள்குமாா், கே.சின்ராசு, சிரஞ்சிவி, பி.செல்வராசு, உ.வினோத்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மாநகரின் முக்கிய சாலைகள், உதயநிதி ஸ்டாலின் அமைப்புசாரா ஓட்டுநா் நிலையம், ஈசான்ய லிங்கம், யாத்ரி நிவாஸ் அருகில், அண்ணா நுழைவு வாயில் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பணி

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையை வேலூா் விஐடி வேளாண் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று களப்பணி மேற்கொண்டனா். ஆதனூா் கிராமத்தில் ஏ.எஸ்.என்.சாமி அங்கக ஒருங்கிணைந்த விவ... மேலும் பார்க்க

ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை

பொதுத் தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்த பூஜையில், பத்தாம் வகுப்பு, பி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தண்டராம்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியை, போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டை அடுத்த புதூா் செக்கடி ஊராட்சி, கல் நாட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆடு மேய்க்கும் கூல... மேலும் பார்க்க

சாரண-சாரணீய இயக்க சிந்தனை நாள் விழா

திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண-சாரணீய இயக்கம் சாா்பில், சாரணா் தந்தை பேடன் பவுல் மற்றும் லேடி பேடன் பவுல் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை சிந்தனை நாளாகக் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை, தனியாா் மண்டபத... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா கோலாகலம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப்.26) மகா சிவராத்திரி விழா, கோலாகலமாக நடைபெறுகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் அண்ணன் மீது தாக்குதல்: தம்பி மீது போலீஸில் புகாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சொத்துத் தகராறில் அண்ணனை தாக்கிக் காயப்படுத்தியதாக தம்பி மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. செய்யாறு வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கிஷ்டப்பன்... மேலும் பார்க்க