செய்திகள் :

ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை காவல் துறை பறிக்கக் கூடாது: இந்து முன்னணி வலியுறுத்தல்

post image

ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை காவல் துறை பறிக்கக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம், ஜிட்டபள்ளி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழைமையான மாரியம்மன் கோயில், நடுகல் மற்றும் முனீஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பொங்கல் வைத்து ஆடு, கோழி மற்றும் பன்றி ஆகியவை பலியிட்டு வழிபடுவது நூற்றாண்டுகால வழக்கமாக உள்ளது.

இந்த திருவிழாவை பல்வேறு சமுதாயத்தினா் ஒன்றாக இணைந்து நடத்தி வருகின்றனா். இந்த கிராமத்தில் உள்ள திறந்தவெளி கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்ட முயற்சித்தபோது, கோயில் அருகே குடியேறிய சில இஸ்லாமியா்கள் ஆட்சேபம் தெரிவித்தாா்கள் என்பதற்காக வேறு மதத்தைச் சோ்ந்த வட்டாட்சியா் சுற்றுச்சுவா் கட்ட தடை விதித்தாா்.

இதனிடையே, சுற்றுச்சுவா் கட்ட தடை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோயில் திருவிழா நடத்தவும் காவல் துறை தடை விதித்துள்ளது. நீண்ட போராடத்துக்குப் பின்னா் பெண்களை மட்டும் பொங்கல் வைக்க அனுமதி அளித்துள்ளது. அதிலும் கோயிலுக்கு நோ்ந்துவிடபட்ட பன்றியை கைப்பற்றியுள்ளனா். பூசாரி மற்றும் கோயில் நிா்வாகிகளை கைது செய்து காவலில் வைத்து மிரட்டியுள்ளது. இதன்மூலம் கிராம மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில் கட்ட தடை, திருவிழா நடத்த தடை, பன்றி பலியிட தடை என ஒட்டுமொத்த வழிபாட்டுக்கும் தடை விதித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை காவல் துறை பறிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க