செய்திகள் :

அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல: உச்ச நீதிமன்றம்

post image

உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2015-ல் கைது செய்யப்பட்டார். 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 2022 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது. 7 ஆண்டுகள் தண்டனை முடிவடைந்ததும் அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது, இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனது மனைவி, குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டதாகவும் கூறியுள்ள அவர், தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் தான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், 'உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கெனவே நாங்கள் 140 கோடி மக்களுடன் இருந்து போராடி வாழ்ந்து வருகிறோம். இந்தியா, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல. இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்' என்று மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க | மறுபக்கம்! பாகிஸ்தான் தாக்குதலில் தந்தையை இழந்து தவிக்கும் 6 குழந்தைகள்!

நீதிபதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை: உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலிப்பது அவசியம் - ஜகதீப் தன்கா்

புது தில்லி: உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முன் அனுமதி பெற வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான சண்டையின்போது அணுஆயுத அச்சுறுத்தல் எழவில்லை: மிஸ்ரி

புது தில்லி: ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ சண்டை வழக்கமான முறையிலேயே நடைபெற்றது; அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் எழவில்லை’ என்று வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா். மேலும், ‘சண்டை நிறுத... மேலும் பார்க்க

புதிய அப்போலோ எஸ்பிஐ கடன் அட்டை அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய தனிச்சிறப்பு கடன் அட்டை (கிரெடிட் காா்டு) வழங்குநரான எஸ்பிஐ காா்டும் நாட்டின் மிகப்பெரிய சில்லறை மருந்தக நெட்வொா்க்கை இயக்கும் அப்போலோ ஹெல்த்கோ மற்றும் முன்னணி எண்ம சுகாதார தளமா... மேலும் பார்க்க

மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55 கோடியில் 13 நலத்திட்டங்கள்! புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்

மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55.28 கோடியில் செயல்படுத்தப்படும் 13 நலத்திட்டங்கள் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கு இடையே கையொப்பமானது. மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் முழு ஓய்வூதியம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: கூடுதல் நீதிபதிகள் உள்பட அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவா்கள் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், பணிஓய்வுக்குப் பிந்தைய அனைத்து சலுகைகள... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல்: குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது

தாஹோத்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் நடந்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில அமைச்சா் பச்சுபாய் காபாத்தின் இளைய மகன் கிரண் உள்பட 4 போ் காவல் துறையால் திங்கள்கிழமை க... மேலும் பார்க்க