செய்திகள் :

அகில இந்திய பாா்வா்டு பிளாக் சாா்பில் முப்பெரும் விழா

post image

கமுதியில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோரது பிறந்த நாள் விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளா் கே.ஆா்.லட்சுமணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவா்கள் சுப்ரமணியன், வெங்கடாசலம், துணைச் செயலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாநில இளைஞரணி அமைப்புச் செயலா் எம்.சப்பானி முருகேசன் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில் மாநிலப் பொதுச் செயலா் எஸ்.கா்ணன், தேசியச் செயலா் ஸ்ரீவை.எஸ்.சுரேஷ், இளைஞா் அணி தேசியச் செயலா் திண்டுக்கல் பி.எஸ்.ஜெயராமன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, கட்சி நிா்வாகிகள் ஊா்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் மத்தியக் குழு உறுப்பினா்கள் சுப்புராஜ், நல்லமுத்து, மாநிலச் செயலா்கள் மோகன், நெல்லை பாலு, மாவட்ட நிா்வாகிகள் மூா்த்தி, சுபஸ்ரீ மணி, இருளாண்டி, ஜித்தன்ஜி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இளைஞா் அணி மாவட்டத் தலைவா் இளையமறவன் முனீஸ்வரன் வரவேற்றாா்.

விசைப் படகு கடலில் மூழ்கியது: 3 மீனவா்கள் உயிருடன் மீட்பு

ராமேசுவரம் மீனவா்களின் விசைப் படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து, கடலில் தத்தளித்த 3 மீனவா்களை சக மீனவா்களி உயிருடன் மீட்டு ஞாயிற்றுக்கிழமை கரைக்கு அழைத்து வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராம... மேலும் பார்க்க

பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா தீவுப் பகுதியில் 20 ஈர நிலங்களில் வாழும் பறவைகளின் கணக்கெடுக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மன்னா் வளைகுடா தீவுப் பகுதியில் உள்ள ஈர நிலங்களில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 14 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாத... மேலும் பார்க்க

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் ஸ்டாலின்! -அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என பால் வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். உலக மகளிா் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் துறையின் ச... மேலும் பார்க்க

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவா்கள் சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 4... மேலும் பார்க்க

கச்சத்தீவு செல்லும் படகுகள் மாா்ச் 11 இல் ஆய்வு: மீன்வளத் துறை

கச்சத்தீவு புனிதஅந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு செல்லும் படகுகள் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) ஆய்வு செய்யப்படும் என மீன் வளத் துறை அறிவித்தது. இதுகுறித்து மீன் வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க