செய்திகள் :

அக்டோபருக்குப் பின் புதிய உச்சம் தொட்ட நிஃப்டி! சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு!

post image

தேசிய பங்குச் சந்தை எண் குறியீட்டு எண் நிஃப்டி, கடந்தாண்டு அக்டோபர் மாதத்துக்குப் பின் புதிய உச்சம் தொட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை உயர்ந்து நிறைவடைந்தது.

மத்திய கிழக்கில் தொடர்ந்துவந்த போர்ப் பதற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக ஏற்ற, இறக்கத்தில் இருந்துவந்த இந்திய பங்குச் சந்தையில், அக்டோபர் மாதத்துக்குப் பின்னர் தேசிய பங்குச்சந்தைக் குறீயிட்டு எண் நிஃப்டி மீண்டும் 25,500 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் சற்று லாபம் ஈட்யதின் வெளிப்பாட்டின் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் உயர்வுடன் முடிந்தன.

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000.36 புள்ளிகள் உயர்ந்து 83,755.87 புள்ளிகளில் நிறைவடைந்தன. இது மொத்தத்தில் 1.21 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்தன. தேசிய பங்குச்சந்தைக் குறீயிட்டு எண் நிஃப்டி 304.25 புள்ளிகள் உயர்ந்து 25,549 புள்ளிகளில் நிறைவடைந்தது.

நிஃப்டி 50 குறியீட்டில் பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஜியோ ஃபைனான்சியல் மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்வுடன் இருந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்து.

மும்பை பங்குச் சந்தையில் இன்ட்ராடே வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டியது. கடந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதிக்குப் பின்னர் ரூ. 20 லட்சம் கோடி (20 டிரில்லியன்) அளவுக்கு உயர்ந்துள்ளது. விப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகியவை கணிசமான சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி ரியால்டி, நிஃப்டி மீடியா மற்றும் நிஃப்டி ஐடி ஆகியவை 1 சதவிகிதம் சரிந்து, மிகக் கடுமையான சரிவைக் கண்டன. இதற்கிடையில், நிஃப்டி மெட்டல் மற்றும் நிஃப்டி எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் தலா 2 சதவிகிதம் வரை உயர்ந்தன.

இதையும் படிக்க... விண்வெளி மையத்தில் சுபான்ஷு சுக்லா! அவரின் முதல் உரை என்ன தெரியுமா?

Nifty Hits New 2025 High; Closes Above 25,500 Points for First Time Since October

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.போர்ப்பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இர... மேலும் பார்க்க

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் 2.84% பங்குகளை விற்பனை செய்த டபிள்யூ.எஃப்.எம். ஆசியா!

புதுதில்லி: ஹாங்காங்கை தளமாகக் கொண்ட டபிள்யூ.எஃப்.எம். ஆசியா நிறுவனமானது, ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2.84 சதவிகித பங்குகளை கிட்டத்தட்ட ரூ.701 கோடிக்கு திறந்த சந்தை மூலம் பரிவர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவு!

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட மீட்சி காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.86.07 ஆக முடிவடைந்தது.... மேலும் பார்க்க

உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!

மும்பை: ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில், உலக சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றைய வர்... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் பட்ஸ் இசட் 3! இந்தியாவில் அறிமுகம்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயர்போனான, புல்லட் வயர்லெஸ் பட்ஸ் இசட் 3 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கழுத்தில் மாட்டிக்கொண்டு பாடல் கேட்கும் இயர்போன்களுக்கு இந்திய பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உ... மேலும் பார்க்க

பிரிட்டனில் சுசூகி இ-விட்டாரா அறிமுகம்! இந்தியாவில் எப்போது?

மாருதி சுசூகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாராவை பிரிட்டனில் அறிமுகம் செய்துள்ளது.இரண்டு பேட்டரி விருப்பங்கள், 10 கலர் தேர்வுகள் என பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவின் இந்தாண்டு இறுதிக்கு... மேலும் பார்க்க